#கண்வலி கிழங்கில் சாதனை படைத்த விவசாயின் அனுபவம்
கண்வலிக்கிழங்கு 4 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன் ஒரு ஏக்கருக்கு 2 டன் மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 700 கிலோவை அடியுரமாக போட்டு உழவு செய்து பார் அமைக்க வேண்டும். பாருக்கு பார் 5 அடி செடிக்கு செடி ஒன்னேகால் அடி இடைவெளி விட்டு கிழங்கை நடவுசெய்யனும்
விதைக்கிழங்கு ஒரு ஏக்கருக்கு 300 கிலோ தேவைப்படும் ஒரு கிலோ கிழங்கு 100 ரூபாய் விற்கிறார்கள் உள்ளுரிலேயே கிழங்கு வாங்கிக் கொள்ளலாம்.
விதை நடவு செய்த 15 நாட்களில் கிழங்கு முளைத்துவிடும்
என்னுடைய கண்வலி செடியில் இலை மஞ்சள் கலராக மாறி பிறகு காய்ந்து கொண்டு வந்தது அதற்கு சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தண்ணீரில் விட்டேன். நுன்றாக இருக்கிறது
பூ வருவதற்கு முன்பு அழுகல் நோய் ஏற்படும் இதற்கு டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 கிலோ சூடோமோனஸ் 2 கிலோவை மண்புழு உரம் 100 கிலோவில் கலந்து போட்டுள்ளேன் நன்றாக இருக்கிறது
70 நாட்களில் பூ வர ஆரம்பிக்கும் கண்வலி கிழங்கை நான் ஒட்டுகட்டுகிறேன் பூவில் உள்ள மகரந்த துகள்களை எடுத்து அடுத்த பூவில் தடவி விடுகிறேன்.
ஆட்கள் மூலம் ஒட்டு கட்டுவதால்; காய்கள் மிக நீலமாகவும் தரமானகாயாகவும் இருக்கிறது ஒட்டுக்கட்ட ஒரு ஏக்கருக்கு 6 ஆட்கள் தேவைப்படும் இரண்டு நாட்கள் விட்டு திரும்பவும் தொடர்ந்து ஒட்டுக்கட்டலாம்
புழுவின் தாக்குதல் இருக்கும் இதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு பிவேரியா 10 கிராம் முதல் 20 கிராம் வரையில் கலந்து தெளிக்கலாம்
கண்வலி கிழங்கு நடவு செய்தால் நல்ல லாபம் பெறலாம்
No comments:
Post a Comment