பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த தொழில் நுட்பத்தை கடைப்பிடித்த விவசாயின் அனுபவம்
பருத்தி சாகுபடி செய்யும் பொழுதே பருத்தியை விட மிக வேகமாக வளரக்கூடிய பயிராகி மக்காச்சோளத்தை வாய்க்கால் பகுதியில் நடவு செய்தால் மக்காச்சோளம் வேகமாக வளர்ந்து பருத்தி செடிக்கு பாதுகாப்பாகவும் அமைந்து வெள்ளை ஈ மற்ற செடிகளுக்கு தாக்காமல் இருக்க ஏதுவாக உள்ளது.
மற்றும் மக்காச்சோளத்தில் மகரந்தம் அதிகமாக இருப்பதால் அவற்றிற்கு தேன்வண்டுகள் வரும் அவ்வாறு வரும்பொழுது நமக்கு பருத்திக்கும் தேன்வண்டு வருவதால் மகரந்தசேர்க்கை ஏற்பட்டு அனைத்தும் பூக்களும் காயக வாய்ப்புள்ளது
அதனால் விவசாயிகள் அனைவரும் பருத்தி அல்லது மற்ற பயிர்களுக்கு இதேபோல வரிசை பயிர்களை நடவு செய்து மகசூலை அதிகரிக்கலாம்.
பருத்தியில் பெரும்பாலும் சாறுறிஞ்சும் பூச்சிகள், பறக்கும் பூச்சிகள் அதிகமாக தாக்குகிறது அதற்கு மஞ்சள் அட்டை வாங்கி பயிருக்கு ஒரு அடி உயரத்திற்கு மேல் கட்டி சாறுறிஞ்சும் பூச்சி மற்றும் பறக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
என்னுடைய வயலுக்கு பக்கத்து வயலில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயி பருத்திச் செடிக்கு அடி உரமாக உரம் வைக்கும் பொழுது உரத்தை செடிக்கு அருகில் வைத்து மண்ணால் மூடி விட வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் உரத்தை மேலே போட்டுள்ளார். இவ்வாறு செய்வதால் நமக்கு செலவும் விரையமாகும் உரமும் பயிர் எடுத்துக் கொள்ளாது ஆவியாகி விடும். எந்த உரத்தையுமே செடிக்கு அருகில் வைத்து மண்ணால் மூடிவிடுவதுதான் நல்லது.
No comments:
Post a Comment