அவரைக்காய்
பயிர் சாகுபடி முறை.
பட்டம்
சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி
நிலம் தயாரித்தல்
மண் நன்றாக பொடியாகும் அளவிற்கு உழவு போட வேண்டும். 4 உழவு தேவைப்படும். குட்டை அவரைக்கு பாத்தி முறையை பின்பற்ற வேண்டும். கடைசி உழவின் போது 5 டன்கள் தொழுஉரம் போடவேண்டும்.
வாய்க்கால் அமைத்தல்
பத்து அடிக்கு ஒரு வாய்க்கால் அமைக்க வேண்டும்.
ரகம்
யானைக்காது அவரை (பட்டை அவரை) கோழி அவரை, பட்டை சிவப்பு, நெட்டு சிகப்பு, குட்டை அவரை.
வகைகள் : குட்டை அவரை, பந்தல் அவரை.
பயிர் இடைவெளி
பயிர் இடைவெளி வரிசைக்கு வரிசை 10 அடி,
செடிக்கு செடி 2 அடி இடைவெளியில் விதையை நடவுசெய்ய வேண்டும்.
குட்டை அவரைக்கு பாத்தி முறையில் வரிசைக்கு வரிசை 2 அடிக்கு செடிக்கு செடி 1½ அடி என்ற இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும்.
விதை அளவு
விதை அளவு :
பந்தல் அவரைக்கு 2 கிலோ விதையும், குத்து அவரைக்கு 8 கிலோ விதையும் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும்
விதை நேர்த்தி
விதை நேர்த்தி :
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
உயிர் உர விதை நேர்த்தி
உயிர் உர விதை நேர்த்தி
200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா இரண்டையும் ஆறிய அரிசி வடி கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்திற்குள் நடவு செய்யவேண்டும்.
உயிர் உரம்
இரண்டு கிலோ ரைசோபியம், இரண்டு கிலோ பாஸ்போபாக்டீரியா, 1 கிலோ டிரைக்கோடிடர்மா விரிடி ஆகியவற்றை 50 கிலோ ஆறிய எருவில் கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது விதைக்க வேண்டும்.
நுண்ணுரம்
பயறுவகை நுண்ணுரம் ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ, 20 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின் போது போடவேண்டும்
உர நிர்வாகம்
நன்கு மக்கிய தொழுஉரம் 1 டன் / ஏக்கர் என்ற அளவில் குட்டை அவரைக்கும்,பந்தல் அவரைக்கு ஒரு குழிக்கு 2 கிலோ தொழுஉரம் என்ற அளவில் இடவேண்டும்.ஒரு ஏக்கருக்கு டி.ஏ.பி 50 கிலோ, வைத்து மண் அணைக்க வேண்டும்
நீர் நிர்வாகம்
4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் காய் அறுவடைக்கு முதல் நாள் தண்ணீர் விட்டுத்தான் அறுவடை செய்ய வேண்டும். காய் அறுவடை செய்த பின் மறுநாளே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.பூக்கும் பருவம், காய்க்கும் பருவம் போன்ற காலங்களில் தண்ணீர் அதிகமாக தேவைப்படும்.
களை நிர்வாகம்.
அவரை செடியில் களையில்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். களையில்லாமல் இருப்பதால் மகசூல் அதிகரிப்பதுடன் பூச்சி, நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்
இரண்டாம் மேலுரம்
இரண்டாம் மேலுரம்
பாக்டம்பாஸ் 50 கிலோ போடவேண்டும் செடி மிகவும் பச்சையாக இருந்தால் உரத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள்
அசுவிணி, கோலப்பூச்சி
அசுவிணி தாக்குதல்
அசுவிணி தாக்குதல் அறிகுறி
தாக்கப்பட்ட இலையின் மேல் எறும்பு இருக்கும். இலையின் உள் பகுதி மடங்கி இருக்கும்.
கட்டுப்படுத்தும்முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு இமிடாகுளோர் 1 மில்லி அசிபேட் 2 கிராம், நிம்பிசிடின் 3 மில்லி கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்
கோலப்பூச்சி தாக்குதல்
கோலப்பூச்சி தாக்குதலின் அறிகுறி
இலையின் மேல் வெள்ளை நிறத்தில் கோடு கோடாக பரவி இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
கூட்டுப்புழு தாக்குதல்
கூட்டுப்புழு தாக்குதலின் அறிகுறி கூட்டுப்புழு பூவிற்குள்ளே இருந்து கொண்டு பூவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். பூ கருகி காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
எண்டோசல்பான் 4 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது குளோர்பைரிபாஸ் 4 மில்லி இதில் ஏதாவது ஒன்றுடன் டைக்குளோராவாஸ் 1 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
காய்ப்புழு தாக்குதல்
காய்ப்புழு தாக்குதலின் அறிகுறி
தாய்அந்துப் பூச்சி முட்டைகளை பூவில் இட்டு விடுவதால் இப்புழு உருவாகிறது. காய்ப்புழு தாக்கி இருந்தால் பூ, பிஞ்சு விழுந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை
1 ஏக்கருக்கு 4 சிசி ஒட்டுண்ணி அட்டை கட்டலாம்.
இனக்கவர்ச்சிப்பொறி ஒரு ஏக்கருக்கு 6 இடத்தில் பயிருக்கு ஒரு அடிக்கு மேல் வைத்து ஆண் அந்தபூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
குளோரிபைரிபாஸ் ஒரு ஏக்கருக்கு 400 மில்லி மருந்துடன் டைக்குளோராவாஸ் 100 மில்லி கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வேர் அழுகல் நோய்
வேர் அழுகல் தாக்குதலின் அறிகுறி
வேர் அழுகல் ஏற்பட்டால் செடியின் இலைகள் பழுத்து இலைகள் கொட்டியவுடன் செடி காய்ந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
விதை நட்ட 25ம் நாள் டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ அல்லது 5 கிலோ ப்யூரடான் குருணையுடன் 25 கிலோ வேப்பங்கொட்டை தூள்
கலந்து மண்ணை மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
செல் தாக்குதல்
செல் தாக்குதலின் அறிகுறி
100 நாட்களுக்கு மேல் இந்த செல் இலையின் பின் பகுதியில் கூட்டமாக காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
இமிடா குளோர் ஒரு லிட்டா தண்ணீருக்கு 1 மில்லி மருந்துடன் நிம்பிசிடின் 3 மில்லி கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்
இலைபுள்ளி நோய் தாக்குதல்
இலைபுள்ளி நோய் தாக்குதலின் அறிகுறி
இலையில் சிறு,சிறு புள்ளிகள் தோன்றி இலை காய்ந்து கொட்டிவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
இதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு கார்பென்டிசம் 2 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். மீண்டும் அறிகுறி தென்பட்டால் 15 நாள் கழித்து தெளிக்க வேண்டும்.
நூற்புழு தாக்குதல்
நூற்புழு தாக்குதலின் அறிகுறி
தண்டுப்பகுதி பூமியில் இருந்து ஒரு அடிக்கு மேல் வீங்கி காணப்படும். தண்டுப்பகுதி வீங்கி இருந்தால் செடியின் காய்ப்புத்தன்மையும். வளர்ச்சியும் குறையும் மகசூல் பாதிக்கும். சில சமயங்களில் வீங்கிய இடத்தில் செடி ஒடிந்து காய்ந்து விடும்
கட்டுப்படுத்தும் முறை
விதை நடவு செய்த 15 முதல் 20 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு பியூரடான் குருணை 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ இரண்டையும் கலந்து வேர் அருகில் போட்டு மண் அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை தொழில்நுட்பம்
நன்கு முதிர்ந்த காய்களை வாரம் ஒரு முறை பறிக்கலாம்
.
குறிப்பு
தண்ணீர் தேங்காத வயலை தேர்வு செய்வது நல்லது.
ஒரு குழியில் 2 - 3 விதைகளை நடவின் போது போட வேண்டும். முளைத்தவுடன் நன்றாக உள்ள ஒரு செடியினை விட்டு மற்றவற்றை நீக்கி விடவேண்டும்.
முதலில் வரும் கொடியை ஒரு குச்சியால் படர விட வேண்டும்.கொடி பந்தலில் போய் தொடும் போது நுனியினை கிள்ளிவிட வேண்டும்.
கிளைகளை ¼ இஞ்ச் அடி அளவில் வெட்டி விட வேண்டும். இதனால் கொடிகள் பந்தலில் சீராக பரவி வளரும்.
பந்தலின் கழே உள்ள முதல் தண்டில் வளரும் கிளைகளை அகற்றி விடவேண்டும். பூக்கும் பருவத்தில் பூக்கொத்துக்கள் இருக்கும் கிளையில் ஒரு கங் விட்டு வெட்டி விட வேண்டும். இதனை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment