வாழை கேள்வி பதில்
1.வாழை தோப்பில் எத்தனை முறை மறுதாம்பு விடலாம் ?
பதில் : மறுதாம்பு விட கணக்கு இல்லைங்க. கிழங்கு அழுகல் மற்றும் வேற்புழு தாக்குதல் வராமல் பார்த்துக்கொண்டால் போதும்.
2.வாழை தார் அறுவடை செய்த பின் மரத்தை தண்டோடு வெட்டி நிலத்திலேயே போட்டு உழவேண்டும் என்கின்றனரே ? தார் / வாழ பட்டை மூலம் வரும் பணம் vs நிலத்திலேயே போட்டு உழுதல் : சரியா?
பதில் : அப்படியே நிலத்தில் தூளாக்குவது சிறந்தது. அடுத்த பயிடுக்கு நல்ல பலன் கொடுக்கும். மேலும் இதனை இரண்டு விதமா பார்க்கலாம், ஒன்று மதிப்பு கூட்டுதல், வாழை மரத்திலிருந்து கைவினை பொருட்கள் , உடைகள் இன்னும் இதர பொருட்கள் செய்ய பயன் படுத்தப்படுகின்றன. அடுத்து .. நமக்கு தேவையானவற்றை எடுத்து மீதத்தை மண்ணுக்கே கொடுத்து விடுவது , இது வாழை மட்டும் அல்ல அணைத்து பயிருக்கும் பொருந்தும். [ மக்கி மண்ணுக்கு உரமாகும் ]
3.ஒன்றிலிருந்து இரண்டு வருட இயற்கை வழி விவசாயம் பின் பஞ்சகவ்யா போன்றவை தேவையில்லை என்கின்றனரே ?
பதில் : 1-2 வருட என்பது மிக சீக்கிரம், குறைந்தது 5 வருடங்களுக்கு மேல் ஆகும், நீங்கள் முற்றிலும் இயற்கை வழி வேளாண்மை செய்து வந்தால் மட்டும் பசுந்தாள் உரம் மற்றும் கால்நடை கழிவுகள் போதிய அளவுகள் இருக்கும் பட்சத்தில் நுண்ணுயிர் பெருக்கம் நன்றாக இருக்கும். மண்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தி இருப்பது அதன் அறிகுறி. அப்படி இருக்கும் பட்சத்தில் நோய் தாக்குதல் தானாக குறைந்து இடுபொருள் இன்றி பயிர் செழிப்பாக வளரும்.
4.அதிக காற்று / மழையின் போது, முதலில் பாதிப்படைவது வாழை தோட்டங்கள் தான் !! வயலை சுற்றி உயர்ந்த மரங்களை ( சவுக்கு, மூங்கில், அகத்தி …. ) நட்டு வளர்த்தால் காற்று புயல் தாக்கத்திலிருந்து வாழை மரங்களை காப்பாற்றலாமாமே?
பதில் : வயலை சுற்றி உயர் மரங்கள் நடவு செய்வது காற்றினை மேல் நோக்கி எடுத்துச்செல்லும். அச்சமயம் வாழைக்கு பாதிப்பு இருப்பதில்லை என தெரிவிக்கிறார்கள். வாழைக்கு மட்டும் அல்ல , உங்கள் வயலின் வரப்போரங்களில் கட்டாயம் மரங்கள் இருக்கணும் / வளர்க்கணும் .. காற்று தடுப்பாக செயல்படும் .. உங்கள் நிலத்தின் மீது உள்ள ஈரப்பதத்தை நிலை நிறுத்த மரங்கள் உதவி புரியும் .. அவ்வாறு ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் பயிர்கள் வாடாது.
5.வாழைத்தோப்பில், தார் எடுப்பவர்கள் , இலை, வாழ பட்டை நார் & தண்டு எடுக்க மாட்டார்களா?
பதில் : தார் எடுப்பவர்கள் இலை, தண்டு, நார் எடுப்பதில்லை ஆனால் நாம் அதற்கென இருக்கும் சில சில்லறை வியாபாரிகளை வைத்து நல்ல லாபம் ஈட்டலாம். தார் அறுவடைக்கு பிறகு சில சமயங்களில் பக்க கன்றுகள் உள்ள இலைகள் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment