Tuesday, December 20, 2016

மழைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க ஆலோசனைகள்

மழைக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க ஆலோசனைகள்

மழைகாலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது கால்நடைகள்தான் அவற்றை பாதுகாப்பது மிகவும் முக்கியம்
மாட்டுக் கொட்டகை ஆட்டுக் கொட்டகை இவற்றில்
தண்ணீர் கோமியம் இவை தேங்கி நின்றால் அவற்றில் ஈக்கள் மொய்க்கும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
தொழுவத்தில் சேறு சகதி இல்லாமல் புதுமண்கொட்டி வைக்கவும் சிமிண்ட் தரையாக இருந்தால் அவற்றை கழுவி சுத்தமாக வைக்கவேண்டும்.
சுத்தமாக வைக்கவில்லை என்றால் மாடுகளுக்கு கழிச்சல் நோய் வரும் வயிறு மந்தமாகும்.
மழைகாலத்தில் பசுந்தீவனத்தை அப்படியே போடக்கூடாது உலர்த்திப் போடவும் வைக்கோல் சோளத்தட்டை முதலியவற்றை நறுக்கி போடவும் தவிடு , பிண்ணாக்கு, குச்சி தீவனம், கலப்பு தீவனம் முதலியவற்றை கொடுக்கலாம்;.
கொசுக்களை விரட்ட புகைமூட்டம் போடலாம்
சேறு, ஈரமானதரையில் மாடுகள் படுத்திருந்தால் மடிவீக்க நோய் வர வாய்ப்பிருக்கிறது வெதுவெதுப்பான நீரில் மடியை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
பேன், உன்னி மாடுகளுக்கு இருந்தால்; வேப்பெண்ணையில் துணியை நன்றாக நனைத்து மாட்டின் உடம்பில் தேய்த்து விடவும்.
ஒரு தவரசட்டியில் நெருப்பை போட்டு அதில் நொச்சி இலையைபோட்டு வேப்பெண்ணெய் விட்டு புகை மூட்டம் போடவும்
மாடுகளுக்கு வயிறு ஊதிக்கொண்டால்
முற்றிய வெற்றிலையுடன் பெருங்காயத்தைச் சேர்த்து தட்டக்குச்சியில் மடித்து வாய்க்குள் கொடுக்க வயிறு ஊதிக் கொள்ளுதல் குறையும்
சுக்கு, மிளகு, பூண்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து கருப்பட்டி கால் கிலோ சேர்த்து இடித்து உருண்டையாக 1 வேளை கொடுத்தால் சரியாகும்.
வயறு உப்புசம், (வயிற்று பொருமல்) ஏற்பட வாய்புள்ள மழைக்காலங்கள்)
ஒரு மாட்டுக்கு 120 மில்லி சமையல் எண்ணெயை கலப்பு தீவனத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் முன் கொடுக்க வேண்டும்.
வயிறு பொறுமல் ஏற்பட்ட பின்பு செய்யவேண்டியது
முன்கால்கள் மேடான பகுதியிலும் பின் கால்கள் தாழ்வான பகுதியிலும் இருக்குமாறு கட்டினால் மாட்டுக்கு மூச்சுவிட ஏதுவாகும்.
மாட்டை நடக்கச் செய்ய வேண்டும்.
வயிற்றின் இடதுபுறத்தில் கடைசி விலா எலும்புக்கு பக்கத்தில் மேற்புரத்தில் நன்கு தேய்த்துவிட வேண்டும்
வயிறு பொறுமல் அசைபோடாமல் இருந்தால்
பத்து வெற்றிலை சிறிதளவு பெருங்காயம் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலக்கி காலை மாலை இருவேளையும் உள்ளுக்குக்கு கொடுக்கவும். மேலும் சிறிது உப்பை உள்ளுக்கு( அசைபோட) கொடுக்கவும். அல்லது 10 கிராம் பெருங்காயம் ஒரு வாழைப்பழத்தில் வைத்து கொடுக்கவும்.

No comments:

Post a Comment