Saturday, December 31, 2016

வரகு சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

#வரகு சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

நிலத்தை முன்று முதல் நான்கு உழவுகள் வரை போடவேண்டும் கடைசி உழவின் போது மக்கிய தொழுவரம் ஒரு ஏக்கருக்கு 4 டன்  போடவும் அதன் பிறகு வரகு விதை ஒரு ஏக்கருக்கு 4முதல் 5 கிலோவை வயல் ஈரமாக இருக்கும் சமையத்தில் விதைத்து விட்டு உழவு செய்ய வேண்டும்.

மூன்று நாட்களில் விதை  முளைத்துவிடும்  25 நாட்களில் களை வெட்டி விடவும் 75 முதல் 80 நாட்களில் அறுவடை செய்யலாம் அறுவடை செய்து நன்கு காயவைத்து இயந்திரம் கொண்டு பிரித்தெடுக்கலாம்

குறிப்பு

வரகு சாகுபடி செய்ய 3 தண்ணீர் விட்டால் போதுமானதாக இருக்கும் நடவு பருவம,; களை எடுக்கும் பருவம், கதிர் பால்பிடிக்கும் பருவம் ஆகிய மூன்று பருவத்திலும்  தண்ணீர் பாய்ச்சவேண்டும்

முன்காலத்தில்  மானாவாரியில் வரகு சாகுபடி செய்தால்  பருவத்திற்கு மழை பெய்யும் தற்பொழுது பருவமழை சரியான தருணத்தில் பெய்யாததால் கண்டிப்பாக மூன்று பருவத்திலும் தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகிறது

சிறுதானியத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது சர்க்கரை நோயளிகளுக்கு மிகவும் பயனள்ளதாகவும் உள்ளது  வரகு  மருந்து எதுவும் அடிக்காமல் வரும் பயிராக இருப்பதாலும் தற்பொழுது இவற்றை மக்கள் விரும்பி உண்பதால் இதற்கு விலை அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது

எனவே விவசாயிகள் சிறுதானியப்பயிர்கள் சாகுபடி செய்து மகசூலை அதிகரிக்கலாம் வரப்போகும் நம் சந்ததியினரையும் நோய் இல்லாமல் பாதுகாக்கலாம்

No comments:

Post a Comment