Thursday, December 15, 2016

மரம்

அகத்தி மரம்

அகத்தி மரம் , வெற்றிலைக் கொடிக்காலில் வளர்க்கப் படுகிறது.வெற்றிலை பயிர் செய்யும் இடத்தை கொடிக்கால் என்று அழைக்கிறோம்.வெற்றிலைக் கொடி, அகத்தி மரத்தில் சுற்றிப் படர்கிறது. அகத்தி மரத்தின் இலையை நாம் அகத்திக் கீரை என்று சொல்கிறோம்.அகத்திக் கீரையை சமைத்துச் சாப்பிடலாம்.அகத்திக் கீரை வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்ற வல்லது.

அசோக மரம்

அத்தி மரம்

அத்தி மரம் ,பூக்காமலே காய்க்கும் வகையைச் சேர்ந்தது.அத்திப் பழம் உடலுக்கு மிகவும் நல்லது.இரத்தத்தை விருத்தி செய்யும். "அத்திப் பழத்தைப் புட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை" என்று ஒரு முது மொழி உண்டு.

அரச மரம்

அரச மரம் மிகவும் உயரமாக படர்ந்து வளரும்.பூக்காமலே காய்க்கும் வகையைச் சேர்ந்தது.இதன் பழங்கள் விதை நிறைந்தவை.இவற்றை கிளிகள் விரும்பி சாப்பிடும்.அரசமரம் சலசல என ஓசை எழுப்பும்.(காற்றில் இலைகள் அசைவதால்).அரச மரத்தின் அடியில் பிள்ளையாரை வைத்து வழிபடுவார்கள்.

ஆப்பிள் மரம்

ஆல மரம்

அரச மரம் போல ஆல மரமும் உயர்ந்து வளரும்.இதன் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறிவிடுவதால், ஆலமரத்தின் அடிமரம் அரிக்கப்பட்டாலும்(கரையான்கள் அடிமரத்தை அரித்துவிடும்) விழுதுகள் அதனைதாங்கிக் கொள்கின்றன."ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" -அதாவது ஆல மரத்தின் விழுது மற்றும் வேப்பமரத்தின் குச்சி போன்றவற்றால் பல் துலக்கினால் பற்கள் உறுதியாக இருக்கும்.

இரப்பர் மரம்

இலந்தை மரம்

இலவ மரம்

இலுப்ப மரம்

சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப் பூதான் சர்க்கரை

இலுப்பை விதைகளில் இருந்து இலுப்பை எண்ணெய் எடுக்கப் படுகிறது.இந்த எண்ணெய் சிவன் கோவில்களில் விளக்கெரிக்கப் பயன்படுகிறது.

ஈச்ச மரம்

எலுமிச்சை மரம்

எலுமிச்சை மரம் வீட்டுத் தோட்டங்களிலும் நிலத்தில் பெருமளவிலும் பயிர் செய்யப் படுகிறது.இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது புளிப்புச் சுவை கொண்டதாக உள்ளது.எலுமிச்சைப் பழச்சாறு உடலுக்கு குளிர்ச்சி தரும்

ஒதிய மரம்

ஒதிய மரம் மிகவும் மென்மையானது.எனவே இதன் மரத்தை எதற்கும் பயன்படுத்த இயலாது."ஒதி பெருத்து உத்தரத்திற்கு ஆகுமா?" என்ற சொல்வழக்கு இதனை விளக்கும்.ஒதிய மரத்தின் இலைகள் மற்றும் காய்களாலும் எந்தப் பயனும் இல்லை.வேலி ஓரங்களில் இதனை வளர்க்கலாம்.

கடம்ப மரம்

கருங்காலி மரம்

கருவேல மரம்

கலயாண முருங்கை மரம்

கறிவேப்பிலை மரம்

கொடுக்காபுளி மரம்

கொய்யா மரம்

கொன்றை மரம்

சந்தன மரம்

சப்போட்டா மரம்

சவுக்கு மரம்

சீத்தா மரம்

தூங்கு மூஞ்சி மரம்

தென்னை மரம்

தேக்கு மரம்

நாகலிங்க மரம்

நாரத்தை மரம்

நாவல் மரம்

நுணா மரம்

நெட்டிலிங்க மரம்

நெல்லி மரம்

பப்பாளி மரம்

பலா மரம்

பவழ மல்லி மரம்

பாக்கு மரம்

பிளம் மரம்

பனை மரம்

புங்கை மரம்

புளிய மரம்

பெர்ரி மரம்

பேரிக்காய் மரம்

பூவரசு மரம்

பொந்த புளியமரம்

மகிழ மரம்

மருதானி மரம்

மா மரம்

மாதுளை மரம்

முந்திரி மரம்

முருங்கை மரம்

மூங்கில் மரம்

யூகலிப்டஸ் மரம்

வன்னி மரம்

வாகை மரம்

வாதனாராயண மரம்

வாழை மரம்

வில்வ மரம்

வில்வ மரத்தை இந்துக்கள் மிகவும் புனிதமானதாகக் கருதுகிறார்கள்.வில்வ இலை ஐந்து தளங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.இதன் இலைக்ளால் சிவ பெருமானை அர்ச்சனை செய்து வழிப்டுகின்றனர்.சிவன் கோவில்கள் அனைத்திலும் வில்வ மரம் இருக்கும்.பல கோவில்களில் இது தல விருட்சமாக இருப்பதைக் காணலாம்.

விளா மரம்

வேப்ப மரம்

வேலிக் கருவை

No comments:

Post a Comment