மாப்பிள்ளைசம்பா... 5 1/2 அடி உயரம்... வளர்ந்துள்ளது...
கதிர் சுமார் 10" அளவுக்கு உள்ளது...
நெல் நடவில்... என் வழி இது தாங்க....
1. களைகள் நன்கு வளர விடுவேன்.
2. பவர் டில்லர் கொண்டு சேறு செய்து... சுமார் 21நாள் லேசாக நீர் நிறுத்துவேன்...
3. இந்த நிலையில் பச்சை சாணத்தை கரைத்து விடுவேன்... கூடவே ஜீவாமிர்தமும் கலக்கும்...
4. இந்த நிலையில் நாற்று நல்ல இடைவெளியில் வளர்ப்பேன்... நாற்று நல்ல தடிமனாக வளர்ப்பது அவசியம்... 15-20 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை... ஒற்றை நடவாக... 30செமீ இடைவெளியில் நடவு செய்கிறேன்...
5. வயல் சமமாக இருக்க வேண்டும்...
6. நாற்று தழையும் வரை ...மிதமான நீர் நிறுத்துவேன்...
7. பச்சை திரும்பியதும்... காய்சல் பாய்சலாக நீர் கொடுப்பேன்... ஜீவாமிரதம் தொடர்ந்து கொடுப்பேன்... முடிந்தவரை ஒவ்வொரு நீர் கொடுக்கும் போதுமே.
( நான் ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை: சாணம்+புண்ணாக்கு 2கிலோ+பப்பாளி பழம் )
8. களை யெடுப்பதில்லை....
9. இருமுறை... மீனோஅமிலம்... நீரோடு கொடுப்பேன்...
இனி அறுவடை தான்...
நெல் நன்கு வளர்ந்துள்ளது...
Monday, December 19, 2016
மாப்பிள்ளைசம்பா பயிர் சாகுபடி முறை
Labels:
விவசாயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment