Saturday, December 10, 2016

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

சட்னியில் உப்பு கூடினால் என்ன பண்ணுவது? by Chitra

ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி சட்னியில் போட்டு வைத்தால் அது அதிகப்படி உப்பை உறிஞ்சிவிடும். குழம்பிலும் இது வொர்க்காகும்.
அல்லது இன்னும் ஒரு மிளகாய், புதினா, கொத்தமல்லி தழை, தக்காளி வெங்காயம் என்று ஏதாவது ஒன்றை சேர்த்து அரைத்தாலும் உப்பு அட்ஜஸ்ட் ஆகிவிடும். (தக்காளி வெங்காயம் சேர்ப்பதானால் லேசாக வதக்கி சேர்ப்பது நல்லது)

வடைக்கு மாவு அரைக்கும்போது ஞாபக மறதியால் ரெண்டு முறை உப்பு போட்டுவிட்டால் என்ன செய்யலாம்?

மறுபடி கொஞ்சம் உளுந்து ஊறவைத்து அரைத்துக் கலக்கலாம். ஆனால் தேவைக்கு அதிகமான மாவை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது? அது போல சமயங்களில் நிறைய காய்கறிகள், உதாரணத்துக்கு கீரை, குடைமிளகாய், கோஸ், வெங்காயம், காரட் போன்ற காய்கறிகள் நறுக்கி சேர்த்துவிடலாம். நிறைய காரம் அதாவது பச்சை மிளகாய் சேர்க்கவும் மறக்க வேண்டாம். இது ஒரு வகையில் உப்பைக் குறைத்துக் காட்டும்.

இதையும் விட சுலபமான ஒரு வேலை இருக்கு. நாலு பிரட் ஸ்லைஸ் எடுத்து தண்ணீரில் நனைத்துப் பிழிந்து மாவில் சேர்த்துவிட்டால் உப்பு குறையும்.

டிப்ஸ்: எப்போதும் வடைக்கு அரைக்கும்போது மிளகாய் உப்பு சேர்த்து தனியாக மிக்சியில் அரைத்து வைத்தால் அரைக்கும்போதே மாவில் கலந்துவிடலாம். அரைக்க தெளிக்கும் தண்ணீரை விட இது போல் செய்தால் உப்பு விட்டுக்கொள்ளும் நீரே அரைக்கவும் போதுமானதாய் இருக்கும்.

கடைசியாக ஒரு வார்த்தை:

உப்பு டப்பாவில் எப்போதும் சிறிய அளவு ஸ்பூன்களை போட்டு வைப்பது நல்லது. அசந்து மறந்து கூட உப்பு கூடிப்போனது என்ற தவறு நேராது.

கொசுறாக ஒரு டிப்ஸ்:

குழம்பில் உப்பு போட்டோமா, போடவில்லையா என்று சாப்பிட்டுப் பார்க்காமலேயே கண்டுபிடிக்கலாமாம். உப்பு போடவில்லை என்றால் குழம்பு ஓரங்களில் கொதிக்கும். உப்பு போட்டிருந்தால் நடுவில் கொதிக்குமாம். வலையில் பிடித்த டிப் இது. இதை ஆராய்ச்சி செய்ய நினைத்தால் செய்யுங்கள்.

No comments:

Post a Comment