உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் குங்குமப்பூ :
உயர் ரத்த அழுத்தத்தை போக்க கூடியதும், மாரடைப்பை தடுக்கவல்லதும், மாதவிடாய் பிரச்னையை தீர்க்க கூடியதுமான குங்குமப்பூவின் மகத்துவத்தை பற்றி நாம் இன்று பார்ப்போம். வடமொழியில் ‘குங்குமா’ என்று அழைக்கப்படுவது குங்குமம். காஷ்மீரில் விளையக்கூடியது என்பதால் ‘காஷ்மிரா’ என்ற பெயரும் குங்குமத்துக்கு உள்ளது. வாசனை பொருளாக அறியப்படும் குங்குமப்பூ, அரு மருந்தாக பயன்படுகிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய தன்மை கொண்டது குங்குமப்பூ. ரத்தத்தை சீராக்க கூடியது, ரத்த நாள வீக்கத்தை சரிசெய்ய கூடியது குங்குமப்பூ. மாரடைப்பை மட்டுமின்றி புற்றுநோயை தடுக்க கூடியது. உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது. குங்குமப்பூ திரி போன்று இருக்கும். அதிலிருந்து 15, 20 திரியை எடுத்து கொள்ள வேண்டும். 1 ஏலக்காயை தட்டி வைத்துக்கொள்ளவும். சீரகம் அரை ஸ்பூன், மிளகு அரை கிராம் எடுத்துகொள்ளவும். இவைகளுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
சுவைக்காக பனங்கற்கண்டு, தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதை குடித்துவர உயர் ரத்த அழுத்தம் குறையும். பொதுவாக உணவில் மணத்துக்காகவும், வண்ணத்துக்காகவும் சேர்க்கப்படும் குங்குமப்பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. உள் உறுப்புகளை தூண்டக்கூடியது. நரம்பு தளர்ச்சி, ஒற்றை தலைவலியை தீர்க்கவல்லது. சோர்வாக இருப்பவர்களுக்கு புத்துணர்வை கொடுக்க கூடியது. மாதவிலக்கை தூண்டக் கூடியது. மாதவிலக்கை சீராக்கும் குங்குமப்பூ உடல் வலியை போக்க கூடியது.
குங்குமப்பூவுடன் அரை ஸ்பூன் பெருங்காயம், பனை வெல்லம் 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது தடைபட்ட மாதவிடாய்க்கு நல்லது. சீரண உறுப்புகளை சீராக்கும் தன்மை கொண்ட குங்குமப்பூ மலச்சிக்கலை போக்கவல்லது.பல்வேறு நன்மைகளை கொண்ட குங்குமப்பூவின் விலை அதிகம். 200 கிராம் குங்குமப்பூவின் விலை 800 ரூபாய். பிள்ளைப்பேறு காலத்தில் பாலில் குங்குமப்பூ கலந்து குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது உண்மையல்ல. ஏராளமான நன்மைகள் இருந்தாலும் குங்குமப்பூவை அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment