ஆழிப்பேரழையில் மூழ்கியபின் பாண்டியர்களின் அனுபவத்தில் உருவானதே இன்று இருக்கும் மதுரை. புயல் வந்தாலும் அசையாத ஊரு . .
புயல் பூகம்பம் கூட வாரத அளவு சரியான இடத்தை ஆராய்ந்து உருவாக்கிய தலை நகரம் . . அதனால் தான் உலகிலயே ஆறாயிரம் ஆண்டுகளாக இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் ஓரே நகரம் நம்ம "மதுரை" ஆகும்.
முத்துக்கு பெயர் போன பாண்டிய நாட்டில் பாண்டியனும் தலைநகரை கடலோரத்திலயே வைத்திருந்தான் தென்மதுரை , பின் கபாடபுரம். கடல் சீற்றத்தால் இரண்டுமுறை அழிந்த பின் அனுபவத்தில் தலை நகரை கடலில் இருந்து பல கி.மீ தொலைவில் வைகை நதிக்கரையில் உருவாக்கினான். இரண்டாம் தலைநகராக கொற்கையை கடலோரத்தில் பயன் படுத்தினான்.
புயல் வரும் போதெல்லாம் நாம் மதுரையில் பிறந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றோ தோன்றுகிறது. பாண்டியர்களுக்கு நன்றி.
ஆறாயிரம் ஆண்டுகளாக தலை நகராக இருந்த ஊர். வேறு எந்த ஊருக்கும் இந்த சாதனை கிடைக்கும் என்பதே சந்தேகம் தான் !
கடலோர நகரங்கள் எதுவும் 50 ஆண்டுகளுக்கு மேல் தாக்கு பிடிக்காது என்றே தோனுகிறது உலக வெப்பமயமாதலால் . . .
No comments:
Post a Comment