நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.!!!
அஞ்சி யஞ்சி சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே, என்று மக்களின் அச்சம் கண்டு அஞ்சியவன்.!!!
கஞ்சி குடிப்பதற் கிலார், அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்.!!!
பஞ்சமோ பஞ்சமென்றே நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து துஞ்சி மடிகின்றாரே.!!!
இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலேயே
நெஞ்சு பொறுக்குதிலேயே, என்று வருந்தியவன்.!!!
சாதி மதங்களைப் பாரோம், உயிர் ஜன்மம் இத்தேசத் தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே.!!!
அன்றி வேறு குலத்தவரா யினும் ஒன்றே,
என்ற சமத்துவக்காரன்.!!!
செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே.!!!
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே, ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே, என்று மூச்சுக்காற்றில் உணர்வு சூடேற்றியவன்.!!!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.!!!
வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ.!!!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம், என்ற நெருப்புக்கவிஞன்.!!!
பெரும்பாவலன் பாரதியின் பிறந்தநாள் இன்று 11/12/16, அப்பெரும்பாவலருக்கு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்.!!!
No comments:
Post a Comment