Thursday, January 12, 2017

பொங்கல் விழா...

பொங்கல் விழா...
தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழாவிற்கும் பாவை நோம்பிற்கும் தொடர்பு உண்டு. பாவை நோம்பு மார்கழி மாதம் தொடக்கி தை மாதப் பிறப்பு அன்று முடிவடைகிறது.

இது பெண்களால் நம் பூமியினை மகிழ்விக்க கடைப்பிடிக்கப்படும் நோம்பு. இதனால் பூமி நமக்கு செல்வமும், அருளும் கொடுக்கும் என கொண்டாடுகிறார்கள்.

' ஓங்கி உலகளந்த
உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச்
சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல்
ஊடு கயல் உகள
பூங்குவளைப் போதில்
பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து
சீர்த்த முலைப்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும்
வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்
நிறைந்தேல் ஓர் எம்பாவாய் '

2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு உழவர் பொங்கல் கொண்டாடிய முறையைப் பற்றி இச்செய்யுள் அறிவிக்கிறது.

' வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
வாய் கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற
குற்றானா வுலக்கையால்
கலிச் சும்மை வியாலங் கண் '

( நெற் கதிர் வரிந்த கூரை வீடுகள், கரும்பை வாசலில் கட்டியிருக்கிறார்கள். இவ்வலங்காரம் விழா நாளை அறிவிக்கிறது. தானியம் குவியலாக கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். )

உழவுத் தொழிலை உயிர்த் தொழிலாய் எண்ணி போற்றிப் பாதுகாப்போம், மேம்படுத்துவோம் என கூறி பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம். இதில் மகளீருக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு. அவர்களும் உழவுத் தொழிலை மேலும் விரிவுபடுத்த உதவுபவர்களாக இருக்கவேண்டும்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும் வணக்கங்களும்...
வாழ்வோம் மரங்கள் வளர்த்து நல்ல சுவாசக்காற்றுடன்...

No comments:

Post a Comment