Monday, January 16, 2017

சீரிய சிந்தனை பெருந்தலைவர் காமராஜர்

சீரிய சிந்தனை பெருந்தலைவர் காமராஜர்

மன்னர் ஆட்சி காலத்தில் ராமதபுரத்தில் சேதுபதி என்னும் பணக்கார மன்னன் ஆண்டு வந்துள்ளான் அவங்களுடைய வாரிசான சண்முகராஜேஸ்வர நாகநாத சேதுபதி காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்றினார் அப்போது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலம் அப்போது வைகை அணை பிரச்சினை வருது வைகை அணை தண்ணிரை மதுரைக்கு கொடுக்க மாட்டேன்னு பிரச்சினை பண்ணுகிறார்கள் மக்கள் நாகநாத சேதுபதியும் சேர்ந்து பிரச்சினை பண்ணுகிறார் காமராஜருக்கு அது ஒரு தலைவலியாக இருந்தது அடுத்து தேர்தல் வந்தது மீண்டும் காமராஜர் ஆட்சிக்கு வந்தார் நாகநாத சேதுபதி தேர்தலில் போட்டியிட்டு MLA ஆனார் அவரை காமராஜர் பொதுப் பணித்துறை அமைச்சராக ஆக்கினார் மீண்டும் வைகை அணை பிரச்சினை எழுகிறது அப்போது சட்டசபையில் எதிர்க்கட்சி MLA க்கள் கேள்வி எழுப்பினர் அப்போது காமராஜர் சொன்னார் நாகநாத சேதுபதி நீங்கள்தான் பொதுப் பணித்துறை அமைச்சர் நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார் அவர் அப்போது என்ன செய்ய முடியும் தண்ணீர் திறந்து விடக்கூடிய கடமை தன்னுடையது என்று உணர்ந்து அதற்க்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று சொன்னார் பாருங்கள் காமராஜர் தந்திரத்தை முடியாது என்று சொன்னவரை வைத்தே முடியும் என்று சொல்லி மதுரைக்கு அணையை திறக்க வைத்தார் காமராஜர் சண்டை ,ஆர்பாட்டம் என்று எதுவும் இல்லாமல் தன் ராஜதந்திரத்தால் வெற்றி கண்டார் இதுதான் அவருடைய மக்கள் மீது உள்ள சீரிய சிந்தனை இவர்தான் மக்கள் தலைவர் தன்னலமில்லாத தங்க தமிழன் பெருந்தலைவர் காமராஜர்.
!!==>>>!)(‘(‘(“திருச்சிற்றபலம்”)’)’)(<<<==!!!

No comments:

Post a Comment