#வாழையில் வாடல் நோய், கருகல் நேயை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை
வாழை நடவு செய்த ஆறுமாதத்திற்கு மேல் இலையில் ஓரம் மஞ்சள் நிறமாக மாறி இலை முழுவதும் பழுத்து காய்ந்து விடும் மரம் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும்
நோய்தாக்குலுக்கு அறிகுறி
வாழை மரத்தின் வேர் பகுதியில் நோய் தாக்கும் பிறகு மரம் தார் போட்டாலும் காய் பெருக்காமல் நின்றுவிடும்.
இவற்றை கட்டுப்படுத்த வாழைகட்டை நடவு செய்யும் பொழுது கிழங்கு நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
கிழங்கு நேர்த்தி செய்ய சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 10 கிராம் என்ற அளவில் கலந்து வாழை கட்டையை நனைத்து நடவு செய்யலாம் இவ்வாறு வாழை கட்டை நேர்த்தி செய்து நடவு செய்தால் நோய் தாக்குதல் குறையும்.
வாழை இலையின் ஓரத்தில் மஞ்சள் கலராகி வாடிவிடும் இந்நோய் வந்து விட்டால் சூடோமோனஸ் 5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து வயலில் லேசான ஈரம் இருக்கும் பொழுது வாழை கட்டையின் தூர் பகுதியில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் வீதம் ஊற்றவேண்டும்.
தொடர்புக்கு
0451-2555745
No comments:
Post a Comment