Thursday, January 12, 2017

மனிதன் முதன் முதலில் சமைத்து ருசித்த உணவுதான் பொங்கல்.

தாய் உணவு :-

ஆதிகாலத்தில் காய்கறிகளையும், மாமிசத்தையும் பச்சையாக சாப்பிட்ட மனிதன், நெருப்பை கண்டுபிடித்த பிறகு அவற்றை சுட்டுத் தின்னக் கற்றுக் கொண்டான். காலப்போக்கில் காய்கறிகளையும், தானியங்களையும் அவித்து தின்னவும் பழகினான்.

அப்படிப் பழகிய மனிதன் முதன் முதலில் சமைத்து ருசித்த உணவுதான் பொங்கல். ஆரம்பத்தில் பச்சரிசியை தண்ணீரில் வேக வைத்த ஆதிமனிதனுக்கு அரிசி வெந்ததும் தண்ணீரை வடிக்கும் பழக்கம் கூட இருந்ததில்லை. அதனால் அரிசியும் தண்ணீரும் நன்கு கலந்து பொங்கல் கஞ்சியாகதான் குடித்து வந்தார்கள்.

பிறகு கொஞ்சம் முன்னேற்றம் கண்டு வெறும் பொங்கலுடன் சர்க்கரையும் சேர்த்து சமைத்தனர். அந்த சர்க்கரைப் பொங்கல் அக்கார அடிசல் என்று அழைக்கப்படுகிறது. இது போலவே பருப்பு சேர்த்து செய்யப்பட்ட பொங்கல் கும்மாயம் என அழைக்கப்பட்டது. இப்படி அரிசியும், தண்ணீரும் கலந்த பொங்கல் தான் மனிதனின் ஆதி சமையல் உணவு.இந்த உணவு தான் உணவுகளின் தாய் என ஆராய்ச்சியாளர்கள் கருதிகின்றார்கள்.

அந்த ஆதிகால வழக்கம்தான் வழிவழியாய் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பண்டிகை என்றாலும், மகிழ்ச்சி என்றாலும் பொங்கல் சமைத்து பரிமாறப்படுகிறது.
பொங்கலோ பொங்கல்...
நன்றி :- சூப்பர் லென்ஸ் ( பட்டுக்கோட்டை )

வாழ்வோம் மரங்கள் வளர்த்து நல்ல சுவாசக்காற்றுடன்...

No comments:

Post a Comment