ராணி பத்மாவதி- சித்தூர்- 14ஆம் நூற்றாண்டின் இந்திய கிளியோபாட்ரா
யார் இந்த பத்மாவதி ?
சித்தூரின்(Chittor) மன்னன் ராவல் ரத்தன் சிங்கின் இரண்டாவது மனைவி தான் இந்த ராணி பத்மாவதி (சுயம்வரத்தில் வென்று திருமணம் முடித்தார்).
அறிவில் அழகில், வீரத்தில் இவளுக்கு நிகர் இவரே..
அலாவுதீன் கில்ஜி இந்த ராணி பத்மாவதியின் அழகை கேள்விப்பட்டு சித்தூரை கைப்பற்ற புறப்பட்டு வருகிறான்.
ராணி பத்மாவதியை காட்டினாலே தான் சென்று விடுவதாக தூது அனுப்புகிறான். தூதை ஏற்று அரண்மனைக்கு அழைக்கப்படும் அலாவுதீனுக்கு கண்ணாடி(Mirror) மூலம் ராணி பத்மாவதி காண்பிக்கப்படுகிறாள்..
பத்மாவதியின் அழகில் மயங்கிய அலாவுதீன் திரும்ப செல்லும் வழியில் துணைக்கு வந்த மன்னன் ரத்தன் சிங்கை கைது செய்து ராணி பத்மாவதியை அனுப்பினால் மன்னனை விடுவிப்பதாக அறிவிக்கிறான்.
பல்லக்கில் வருவதாக ராணி பத்மாவதி செய்தி அனுப்புகிறார்.
ஒரு பல்லக்கில் 2 வீரர்கள் உள்ளே, 4 வீரர்கள் வெளியில் தூக்கியும் மொத்தம் 150பல்லக்கு செல்கிறது.
அலாவுதீனின் பாசறையை அடைந்தவுடன் 900 வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் போரிட்டு மன்னனை மீட்கின்றனர்.
பிறகு ஏற்பட்ட பெரும் போரில் ராணி பத்மாவதி மற்றும் அணைத்து ராஜ்புத் பெண்களும் போரில் தோற்ப்போம் என்று தெரிந்தவுடன் தீயில் இறங்கி தங்களை மாய்த்துக் கொள்கின்றனர்.
அலாவுதீன் மற்றும் இஸ்லாமிய படைகள் சித்தூர் கோட்டையில் நுழைந்த போது ஒரு பெண்கள் கூட உயிருடன் இல்லை.
அனைவரும் தீயில் இறங்கி தங்கள் உயரை மாய்த்துக்கொண்டனர்...
உயிரை விட மானமே பொிது என்று எதிரியின் கையில் சிக்காமல் இருக்க இந்திய ராஜ்புட் பெண்கள் தீயில் ஏறி உயிர்துறக்கும் நிகழ்வே சதி எனப்படுகிறது.
ராணி பத்மாவதியின் உண்மை வரலாறு இதுவே...
No comments:
Post a Comment