பாழாய் போன மனசு
பொங்குதுடி....
பொங்கலோ பொங்கல்
என்ற குழவை சத்தம்
நெஞ்சை கிள்ளுதடி...
வெல்லம் போடாமலே
வாழ்க்கை இனிச்சுதடி
நீயில்லா
வாழ்வு வெல்லமானாலும்
கசக்குமடி....
நானும் தான் விதைச்சேன்
நல்லாதான் வளர்த்தேன்
கதிர்முத்தி தான்
அறுத்தேன்
வீடு வந்து சேரலையே...
சாதிக்க வழியில்லை
சாதி சொல்லி பிரிக்கிறாங்க...
இனிக்கும் கரும்பும்
தரம்பிரித்து தான்
சந்தைக்கு வருகிறதென்ற
வாழ்வியல் அனுபவம் தெரியாமல்
ஊருக்கு தெரியாமல்
பொங்கும் என் மனசு
ஊரோடு சேர்ந்து சொல்லுது
பொங்கலோ பொங்கலென்று...!
No comments:
Post a Comment