Wednesday, January 4, 2017

நாட்டுச் சோளம் சாகுபடி

#நாட்டுச் சோளம் சாகுபடி

சோளம் சாகுபடி செய்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது சோளத்தை முன் காலத்தில் மானாவாரி பயிராக சாகுபடி செய்து  அடுத்த வருடம் வரும் வரை உணவுப் பொருளாகவும், அதன் கழிவுகளை கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தி வருவதால் பால் கூடுவதுடன் தரமாகவும் இருக்கும்

எனவே சோளத்தை உணவாக பயன்படுத்தி வந்ததால்  மனிதர்களுக்கோ மற்றும் கால்நடைகளுக்கோ நோய் எதுவும் தாக்காமல்  சுகாதாரமாக வாழ்ந்து வந்தனா.;
சோளத்தில்  நார்ச்சத்து உள்ளது இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் எனவேதான் இவற்றை சர்க்கரை நோயாளிகள்  முக்கிய உணவாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆடிபட்டத்தில் விதைப்பு செய்வார்கள்  நிலத்தை நன்றாக மூன்று முதல் நான்கு உழவுகள் வரை போடவேண்டும் கடைசிஉழவின் போது விதைப்பு செய்து உழவு செய்ய வேண்டும் 22 நாட்களில் களை எடுக்கனும்

அதன் பிறகு அவற்றிற்கு செலவு எதுவும் இல்லாமலேயே மகசூல் வந்துவிடும்  90 நாட்களில்  அறுவடை செய்து இயந்திரம் கொண்டு அடித்து அவற்றை நன்கு உலர்த்தி சுத்தம் செய்து கோணி பைகளில் வைத்து பாதுகாப்பார்கள்
  
சோளத்தை தினமும் காலை, மாலை உணவாக பயன்படுத்தியதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கு நோய் தாக்காமல்  நீண்ட காலம்  சுகாதாரமாக வாழ்ந்து வந்தனர்

நமது முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டுச்சோளத்தை நாமும் சாகுபடி செய்து சுகாதாரமாக வாழ்வோம்

No comments:

Post a Comment