போதும், போங்க!
வேலை என்பது தொடர்ச்சியானது, அது முடிய போவதும் இல்லை.
Ø குடும்பத்தை விட வாடிக்கையாளர்கள் அத்துனை முக்கியமானவர் ஒன்றும் இல்லை.
Ø நீங்கள் உங்கள் வாழ்கையில் தோற்று போனால் உங்களுக்கு கைக்கொடுக்க போகிறவர்கள் உங்கள் குடும்பத்தாரும், நண்பர்களும் மட்டுமே, உங்கள் மேலதிகாரியோ, உங்கள் வாடிக்கையாளரோ இல்லை.
Ø வேலைக்கு வருவதும், வீட்டிற்கு செல்வதும், தூங்குவதும் மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்க்கை என்பது அதையும் தாண்டிய அற்புதமான விசயம். நீங்கள் சமுகத்துடன் உறவாடவும், பொழுதுப்போக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஓய்வு எடுக்கவும் அவசியம் நேரம் ஒதுக்குங்கள். இவற்றை இழந்து, வாழ்க்கையை அர்த்தமற்றது ஆக்கிவிடாதிர்கள்.
Ø காலதாமதமாகியும் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர், கடும் உழைப்பாளி ஒன்றும் இல்லை அவர் தகுந்த நேரத்தில் வேலையை முடிக்க தெரியாத முட்டாள் அது மட்டும் அல்லாமல் அவர் வாழ்க்கையில் அவரது சொந்த வாழ்க்கையையும் சமுகத்தையும் இழந்தவர்.
Ø நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடினப்பட்டு படித்ததும், போராடியதும் இயந்திரம் போல், இந்த அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இல்லை.
Ø உங்கள் முதலாளி உங்களை காலதாமதமாகியும் வேலை செய்ய வற்புறுத்தினால், அவரிடமும் இதை பற்றிச்சொல்லுங்கள். அவரும் அவரது வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்யட்டும்.
வேலையை விட்டு சரியான நேரத்தில் வெளியேறுவது = அதிக உற்பத்தித்திறன் + நல்ல சமுக வாழ்க்கை+ நல்ல குடும்ப வாழ்க்கை
வேலையை விட்டு காலத்தாமதமாக வெளியேறுவது = குறைந்த உற்பத்தித்திறன்+ சமுகவாழ்க்கை இழத்தல்+ நல்ல குடும்ப வாழ்க்கையை தொலைத்தல்
No comments:
Post a Comment