#பாகல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு
பாகல் நடவு செய்த 60 நாட்களில் கொடி பந்தலை அடைக்கும்; சாறுறிஞ்சும் பூச்சிகள் அதிகமாக தாக்கும் இவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த மஞ்சள் நிறப்பொறி ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து கவர்ந்து அழிக்கலாம்
பாகற்காய் பிஞ்சாக இருக்கும் பொழுதே பழ ஈ காயை கடித்துவிட்டால் அந்த காய் வளைந்து பெரிசைசாகாமல் சிறியது பெரியதாக காணப்படும் சந்தையில் வாங்கமாட்டார்கள்
இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் இனக்கவர்ச்சி பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்
பாகல் செடியில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும் ஆரம்பத்திலேயே பாகல் நாற்றை அல்லது விதையை விதைநேர்த்தி செய்து நடவு செய்தால் நோய் தாக்குதல் வராது
நோய் ததாக்குதல் தென்பட்டவுடன் சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வயலில் தண்ணீர் பாய்ச்சி ஈரம் இருக்கும் சமையத்தில் செடிக்கு அருகில் ஊற்றி விடலாம். அல்லது தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
No comments:
Post a Comment