Friday, January 6, 2017

கொய்யா சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயின் அனுபவம்

#கொய்யா  சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயின் அனுபவம்

திரு . சசிக்கண்ணன்
கொய்யா சாகுபடி அடர் ஒட்டுமுறையில் பனாரஸ் கன்று வாங்கி நடவுசெய்து உள்ளேன்.  மரமாக வைத்தால் ஒரு ஏக்கருக்கு 150 கன்றுகள் தான் வைக்க முடியும் ஆனால் நான் செடியாகவே 550 கன்றுகள் வரை நெருக்கி நடவு செய்துள்ளேன்.  மரமாக வைத்தால் காடும் வேஸ்டாக இருக்கும் அடர்முறையில் நடவு செய்வதால் காடு வேஸ்டாகாமல் உள்ளது

அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி செய்து 18 மாதங்கள் ஆகிறது ஆறு மாதத்திற்கு ஒரு முறை காய் பரிக்கலாம்  மூன்று சீசன் காய் எடுத்துள்ளேன்  4 மாதங்களுக்கு ஒரு முறை செடியை கவாத்து செய்து மரமாக வளரவிடாமல் செடியாகவே படரவிட்டுள்ளேன்.

காவாத்து செய்வது 4 கணு விட்டு கவாத்து செய்யனும் அதிலிருந்து வளர்ந்து பூஎடுக்க ஆரம்பிக்கும் ஒரு மரம் குறைந்தது 100 காய்கள் வரை காய்க்கும். 5 காய்கள் ஒரு கிலோ எடை இருக்கும். ஒரு மரத்துக்கு 20 கிலோ காய் வரும்

வியாபாரிகள் காட்டிலே வந்து எடுத்தால் நமக்கு கமிசன் இல்லை வண்டி வாடகை வராது ஆனால் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் விலை கொஞ்சம் கூடுதலாக கிடைக்கு ஒரு கிலோ 20-25 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

உரம்னு பார்த்தால்   அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா , டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ், வேம் ஒவ்வொன்றிலும் 5 கிலோ அளவு எடுத்து மண்புழு உரம் 500 கிலோவில் கலந்து  செடிக்கு அருகில் வைத்து  மண்ணால் மூடி தண்ணீர் விட்டேன் நன்றாக உள்ளது

மேலும் காய்கள் பிஞ்சாக இருக்கும் பொழுதே பழ ஈயின் தாக்குதல் இருக்கும் பழ ஈ கடித்தால் காயில் புள்ளிகள் தோன்றி விற்பனைக்கு ஏற்றதாக இருக்காது
அவற்றை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் வைத்து பழஈஇயை கவர்ந்து அழிக்கலாம்

மாவுப்பூச்சியின் தாக்குதல் இருக்கும் அவற்றை கட்டுப்படுத்த வெர்டிசீலியம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் அளவில் கலந்து ஒவ்வொரு செடிக்கு 5 லிட்டர் வீதம் செடியை சுற்றி ஊற்றி விடனும் செடியின் மேலும் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

கொய்யா அடர் ஒட்டுமுறையில் நடவு செய்தால் நல்ல லாபம்தான் பத்து வருடத்திற்கு தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment