இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் சாவும் இயற்கையாக இருக்கும்..ஓஷோ:
எதற்கும் முடிவில்லை:
எனது வீட்டின் பக்கத்திலுள்ள
ஒரு வயதான மரம் மழையில்
நடனமாடிக்
கொண்டிருக்கிறது. அதன்
பழுத்த இலைகள்
அப்படியொரு அழகோடும்,
நளினத்தோடும் உதிர்ந்து
கொண்டிருக்கின்றன.
காற்றிலும் மழையிலும் அந்த
மரம் மட்டும் நடனமாடிக்
கொண்டிருக்கவில்லை.
மரத்திலிருந்து விடை பெற்று
உதிரும். இலைகளும்
நடனமாடுகின்றன. அது ஒரு
குதூகலம்: கொண்டாடட்டம்.
இயற்கையின் படைப்புகளில்
மனிதனைத் தவிர வேறு
எதுவுமே முதுமையினால்
வாடிட வருந்துவதில்லை.
இயற்கைக்கு (இருத்தலுக்கு)
முதுமை பற்றி எதுவுமே
தெரியாது என்பது நிஜம்.
கணிவதை பற்றி அது
தெரிந்திருக்கிறது. பக்குவம்
பற்றி அறிந்திருக்கிறது.
நடனமாடுவதற்கும், முடிந்த
அளவுக்கு ரசித்து, ருசித்து
முழுமையாக வாழ்வதற்கும்
ஏற்ற தருணம் உண்டு.
ஓய்வதற்கும் உரிய தருணம்
உண்டு என்பதும் அதற்குத்
தெரிந்ததே.
எனது வீட்டின் அருகேவுள்ள
அந்த மரத்தின் பழுத்த
இலைகள்
அழிந்துவிடவில்லை. அவை
ஓய்வடையப் போகின்றன.
அவ்வளவுதான். அவை
உயிர்த்தெழுந்த அதே
மண்ணில் இரண்டறக் கலந்து
மக்கிப் போகப் போகின்றன.
அதில் சோகமில்லை. துக்கம்
இல்லை. நிரந்தரத்தில்
ஐக்கிய மடைவதற்கான
உதிர்தலில் ஆழ்ந்த அமைதி
நிலவுகிறது. இன்னொரு
நாள், இன்னொரு
சந்தர்ப்பத்தில், வேறு எதாவது
மரத்தில், மற்றொரு
வடிவத்தில், அவை மீண்டும்
திரும்பி வரலாம். மறுபடியும்
அவை நடன மட்டும்.
மறுபடியும் பாடல் இசைக்கும்.
அந்தக் கணத்தில் அவை
ஆனந்தக் கூத்தாடும்.
இருத்தலுக்குத்
தெரிந்ததெல்லாம்
சுழற்சியாக வரும் மாற்றம்
மட்டும்தான். அது
பிறப்பிலிருந்து இறப்புக்கும்,
பிறப்பிலிருந்து பிறப்புக்கும்
வருவதுதான். அது ஒரு
நிரந்தரமான நிகழ்வு.
ஒவ்வொரு பிறப்பிலும்,
ஒவ்வொரு இறப்பும்,
ஒவ்வொரு இறப்பிலும்
ஒவ்வொரு பிறப்பும்
அடங்கியுள்ளது. ஒவ்வொரு
பிறப்புக்கு முன்பு ஒரு இறப்பு
உண்டு. ஒவ்வொரு இறப்பை
அடுத்து ஒரு பிறப்பு உண்டு.
எனவே இருத்தலுக்கு
அச்சமில்லை.
நாற்பது வயதுக்குப் பிறகு
வானமே எல்லை.
🍁ஓஷோ🍁
No comments:
Post a Comment