சித்தன் என்றால் என்ன ?★
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை தெளிந்தவர் என்றும் பொருள். சிவத்தை நினைத்து அவனை தமது அகக்கண்ணால் கண்டு, தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, சத்சித்தானந்தநிலையை அடைந்து செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும்.
★ இச்செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர். இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம்.
★சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்றதிருத்தலங்களாகவிளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்திஇறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின்அசைக்க முடியாத நம்பிக்கை.
★இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும்உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.
★அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.
★அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.
★அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ ....!
★திருமூலர் – சிதம்பரம்
★இராமதேவர் – அழகர்மலை
★அகஸ்தியர் – திருவனந்தபுரம்
★கொங்கணர் – திருப்பதி
★ கமலமுனி – திருவாரூர்
★சட்டமுனி – திருவரங்கம்
★கரூவூரார்- கரூர்
★சுந்தரனார் – மதுரை
★வான்மீகர் – எட்டிக்குடி
★ நந்திதேவர் – காசி
★ பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
★போகர் – பழனி
★மச்சமுனி – திருப்பரங்குன்றம்
★பதஞ்சலி – இராமேஸ்வரம்
★ தன்வந்திரி – வைத்தீஸ்வரன்கோவில்
★கோரக்கர் - வடக்கு பொய்கை நல்லூர்
★குதம்பை சித்தர் – மாயவரம்
★ இடைக்காடர் – திருவண்ணாமலை
No comments:
Post a Comment