16.01.2017
►அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்..
►காளைகளுடன் பேரணியாக வந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி..
17.01.2017
►அலங்காநல்லூரில் போராட்டகாரர்களை போலீசார் கைது செய்தனர்..
►கைதானவர்களை விடுதலை செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம்..
►தமிழகம் முழுவதும் பீட்டாவிற்கு எதிராகவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் போராட்டம் வெடித்தது..
18.01.2017
►ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஒ பன்னீர் செல்வம் டெல்லி பயணம்..
19.01.2017
►ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வலியுறுத்தல்..
►ஜல்லிக்கட்டுக்காக நடத்த சட்டவரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது - முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.. .
20.01.17
►ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..
►போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் கோரி தொடர்ந்து போராட்டம்..
21.01.17
►தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பித்தார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்..
►தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஜனவரி 22 ஆம் தேதி நடக்கும் - தமிழக அரசு அறிவிப்பு..
22.01.17
►அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வந்த முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை போராட்டக்காரர்கள் அனுமதிக்க மறுத்தனர்..
►கோவையில் ரேக்ளா போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை எதிர்த்து போராட்டக்காரர்கள் போராட்டம்..
►ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒத்திவைப்போம் - தமிழக ஜல்லிக்கட்டு பேரவை, கார்த்திகேய சிவசேனாபதி..
23.01.17
►மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்..
►போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி
►ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..
►தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்..
►மற்ற இடங்களில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின் போராட்டக்காரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்..
►அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் - அலங்காநல்லூர் ஊர் கமிட்டி..
►தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது..
24.01.17
►ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் 2016ல் வெளியிட்ட அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றது..
27.01.17
►அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன..
30.01.2017
►ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்..
►அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி, பாலமேட்டில் பிப்ரவரி 9ஆம் தேதி, மற்றும் அலங்காநல்லூரில் பிப்ரவரி 10ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் - ஜல்லிக்கட்டு விழாக் குழு..
31.01.2017
►தமிழக அரசு பிறப்பித்த சட்டத்திருத்தத்துக்கு தடைவிதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்..
02.02.2017
►தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது..
| #Alanganallur | #Jallikattu | #TimeLine
No comments:
Post a Comment