இலக்கியங்கள் சொல்லும் மரக்கலம்
---------------------------------------------------
மயன் மக்கள் என்போர் முதல் சங்கம் கூடும் முன்பே குமரிக்கண்டம் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்களே என்பதை பலர் மறுப்பார்கள். அங்கிருந்து பிற்காலத்தில் புலம்பெயர்ந்த migrated human race தான் நாம் பேசும் செவ்விந்தியர் கறுப்பர் மற்றும் பிறர். இன்றளவும் கேமரூன் காங்கோ கினியா கபொன் போன்ற நாடுகளில், அங்கேயே தங்கிவிட்ட இந்த மாயன் இனத்தவர்களின் மொழியில் ஆங்காங்கே தூய தமிழும் மருவிய சொற்களும் காணக்கிடைகிறது.
மயன் வம்சத்தவர்தான் விஸ்வகர்ம தோன்றலாகும். (காலங்கி சித்தரே மாயன் வம்சத்தவர் என்று போகர் சொல்கிறார்.) போகர் சப்தகாண்டம், இரண்டாம் காண்டத்தில் பாடல் 1926-47 வரை கப்பல் கட்டுமானத்தை விளக்கியுள்ளார். கப்பல் கட்டுமானத்தை முதன் முதலில் போகர்தான் (சீனத்தவராக இருந்து) செய்தார். நூறு கஜம் அகலம், முன்னூறு கஜம் நீளம், பல அடுக்கு நிலைகள், 64 வீடுகள், கண்ணாடி வைத்த ஜன்னல்கள், நீராவியில் இயங்கும் சுக்கான் டர்பைன், சிம்னி, என்று கோட்டை போல கட்டினார் என்றால் அது மிகப் பிரம்மாண்டம் தானே? இது எந்த பழங்கால வடிவ கப்பலோடும் ஒத்துப் போகாது. பிற்காலத்தில் இதில் வாணிபம் நடந்தது ஆனால் முதன்முதலில் வடி வமைத்து அதில் சீன மக்களை உல்லாச சுற்றுலா அழைத்துப் போன முதல் சித்தரே போகர் தான். இவற்றை என்னுடை நூலில் விரிவாகச் சொல்லியுள்ளேன்.
மேற்கத்தியர்களின் நூலையே ஆதாரமாகக் கொண்டு எல்லோருமே கட்டுரைகளையும் நூல்களையும் ஆராய்ந்து எழுதுகிறார்கள். இது தவறு. மிஞ்சிப்போனால் இதன் பழமையை 2000 முதல் 5000 வருடங்கள் வரை தான் சொல்கிறது. அதாவது கலியுகம் தொடங்கிய காலத்திலிருந்துதான் அவர்களுடைய கணிப்பு வருகிறது. போன யுகங்களில் வான்ரதம், விமானம், கப்பல், எல்லாமே ஓடியது. அதெல்லாம் இன்னும் பல லட்ச ஆண்டுகள் முன்னே போகிறதே.
இணையத்தில் ஒரு தவறான செய்தி வந்தால் அதை கண் மூடிக்கொண்டு நம் ஆட்களும் 'காப்பி' அடித்தும் 'ஷேர்' செய்தும் பதிவிடுவார்கள். சற்றும ஆய்வு செய்து சொல்வது இல்லை. இறுதியில் எல்லோருக்கும் தவறான வரலாற்றுச் செய்தி தான் போய் சேரும். மேற்கத்திய கட்டுரைகளை நம்பிக்கொண்டு கட்டுரைகள் புனைவது சரிபடாது.
பிற்பாடு வந்த எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் & புறநானூறு; கம்ப ராமாயணம் போன்ற வற்றில் கப்பல் மரக்கலம் பற்றிய விளக்கமான பாடல்கள் உள்ளது. சேந்தன் திவாகரம் என்ற கப்பல் சாஸ்திர நிகண்டு நூலில், மரக்கலம், தோணி, தெப்பம் போன்றவற்றின் வகைகள் என்னென்ன என்றும் உள்ளது. என்ன வித மரம், வடிவம், என்ன நீர்நிலைக்கு உகந்தது என்ற பல விவரங்கள் மிக ஆழமாக உள்ளது. சாதாரணம், சிறப்பு, பாய்மரம் போன்ற பல வித கட்டுமான சாத்திரங்களை கொண்டது.
நன்றி
-எஸ். சந்திரசேகர்
No comments:
Post a Comment