#தக்காளியில் நிலப்போர்வை பயன்படுத்துதல்
ஒரு ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய 30 மைக்ரான் சீட் 100 கிலோ தேவைப்படும்.
வரிசைக்கு வரிசை 5 அடி செடிக்கு செடி 1.5அடி இடைவெளி என்ற அளவில் துளையிட்டு அவற்றில் நாற்றுக்களை நடவு செய்யனும்.
நடவு செய்த 30 நாட்களுக்குள் செடியை பந்தலில் தூக்கி கட்டிவிட வேண்டும்.
பந்தலில் கட்டிவிட்டால் வெயிலின் தாக்குதல், எலி தொல்லை முதலிய வற்றிலிருந்து தக்காளியை பாதுகாக்கலாம்.
செடியும் வாடாமல் ஒடியாமல் இருக்கும்
சாறுறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மஞ்சள் அட்டை வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
இலைப்புள்ளி நோய், வாடல்நோய், கருகல்நோய் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
No comments:
Post a Comment