Tuesday, February 28, 2017

ஊழலுக்கு எதிரான உன்னத போராளி.

ஊழலுக்கு எதிரான உன்னத போராளி. செய்யாத தவறுக்கு சிறை சென்று, அந்த வழக்கில் தன்னை நிரபராதி என நிரூபித்துக்காட்டிய நிமிர்ந்த நெஞ்சம். யார் இவர். இணையதளங்களில்'சவுக்கு' சங்கர் என்றும், துப்பறியும் சங்கர் என்றும் அழைக்கப்படுபவர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டாலும் தஞ்சமடைந்தது சென்னையில் தான். அப்பா ஆச்சிமுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக பணியாற்றிய போது மாரடைப்பால் காலமானார். அப்போது பத்தாம் வகுப்பு முடித்த சங்கருக்கு,கருணை அடிப்படையில் அதே துறையில் இளநிலை உதவியாளராக பணி கிடைத்தது. சிறப்பு உதவியாளராக பணியாற்றிய போது, 2008 ல் அந்த சம்பவம் நடந்தது.

அது என்ன… இனி நேர்காணலாய்…
போலீஸ் உயரதிகாரிகளின் தொலைபேசி உரையாடலை வெளியிட வேண்டிய நோக்கம் என்ன
1991 - 96 மற்றும் அதன் பிறகு தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் அ.தி.மு.க., அரசு மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் தொடரப்பட்ட போது ஆர்வமாக பணியாற்றினேன். 2001ல் அ.தி.மு.க., அரசு மாறிய பிறகு, 1996ல்தொடரப்பட்ட ஊழல் வழக்குகள் எல்லாமே அதே அதிகாரிகளால் விசாரணையின்றி மூடப்பட்டது. அந்தநேரத்தில் அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த ஊழலை வெளிப்படுத்த முயற்சி எடுத்தேன். அப்போது இருந்த கோட்டா படி, முதல்வரிடம் ஒரு கடிதம் வாங்கி வந்தால், எந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் யாராக இருந்தாலும் பிரைமரி கோர்ஸில் சீட் கிடைத்திருக்கும். ஜெயலலிதா மேல் இருக்கும் ஊழல் வழக்கை கையாண்டு, அந்த வழக்கை மூடிய இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஜெயலலிதா கையாலேயே அவர்களது பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலையில் சீட் வாங்கிய விவரம் தெரியவந்தது. அந்த ஆதாரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சேகரித்தேன். அந்த நேரத்தில் எனக்கு பத்திரிகையாளர்களுடன் நிறைய பழக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போதுதான் இரண்டு ஐ.பி.எஸ்., உயரதிகாரிகளின் தொலைபேசி உரையாடலை, நான் ஒரு பத்திரிகைக்கு வெளியிட்டதாக என் மேல் குற்றம் சுமத்தினர். அது உண்மையில்லை என தீர்ப்பு நிரூபித்தது.

அரசு உயர்அதிகாரிகளை பகைத்துக் கொண்டதற்காக வருத்தப்பட்டீர்களா

தவறு செய்யும்அதிகாரிகள், ஊழல் அதிகாரிகளை தான் அம்பலப்படுத்தினேன். அதற்கான ஆவணங்களை வெளியிட்டேன்.அதனால் வருத்தப்பட்டதும் இல்லை.

காவல்துறையினர் உங்களை சந்தேகப்பட்ட போது

முதன்முதலில் விசாரணை ஆணையம் அழைத்தபோது, வியப்பாக இருந்தது.தொலைபேசி உரையாடல் நடந்த இடத்திற்கும், நான் பணியற்றிய இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. நான் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்த தொலைபேசி ஆதாரங்களை கொண்டு, என்னை சந்தேகப்பட்டனர். விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 3வது நாளில் கைது செய்த போது தான், என்னை 'பிக்ஸ்' செய்தது தெரியவந்தது.

தவறு செய்யாமல் சிறைசென்ற போது...

கைது, இரண்டு மாதசிறைவாசம், அதன்பிறகு நீதிமன்ற வழக்கு என அரசு அதிகாரி, அதிகார மையங்களுக்கு எதிராக போராடினால் இப்படிப்பட்ட நெருக்கடி வரும். சந்தித்து தான் ஆகவேண்டும் என்ற திடமானமனநிலை ஏற்பட்டது.

சிறையில் உங்களை நடத்திய விதம் ...

கைது செய்யப்பட்ட அன்று மாலை முதல் மறுநாள் காலை வரை சி.பி.சி.ஐ.டி., கஸ்டடியில் கடுமையான சித்ரவதை அனுபவித்தேன். மறுநாள் வழக்கறிஞரை சந்தித்தபின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அடுத்த நாள் மாலை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

உங்களை நிரூபித்தது எப்படி ?
சிபிசிஐடி சரியானஆதாரங்களை காட்டாமல் ஜோடித்ததால் சாட்சிகள் மாறிவிட்டன. வழக்கறிஞர்கள் துணையோடு ஜெயித்தேன்.

இனி அரசுப் பணிக்கு செல்வீர்களா

பணி கிடைப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு. இனிமேல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை உள்ளது. அதையும் சந்திக்கவேண்டும்

'சவுக்கு' இணையதளம் துவங்கக் காரணம்

பெரிய அதிகார மையங்களுக்குஎதிராக எந்தவித செய்திகளை வெளியிடுவதற்கும் ஊடகங்கள் தயாராக இல்லாத சூழலில், இணையதளம்மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த ஆவணங்களை அம்பலப்படுத்த நினைத்தேன். ஊழலுக்கு எதிராக சமுதாயத்தை மாற்ற முடிந்ததா ஊழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்; வெளிப்படுத்த முடியும். அதைத்தாண்டி சமுதாயத்தில் பெரியளவுக்கு மாற்றம் கொண்டு வரமுடியும் என நினைக்கவில்லை.

அரசியலுக்கு வருவீர்களா.

எந்த அரசியல் கட்சியில் சேர்ந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நானும் வரையறுக்கப்பட வேண்டும். அதனால் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டேன்.

திசை மாறிய பயணம் கற்றுத்தந்த பாடம்

அரசுப் பணியில் சேர்ந்த போது 58 வயதில் நல்ல பதவி உயர்வோடு நிம்மதியான மனநிலையில் ஓய்வுதிட்டம். நடந்த சம்பவங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு இங்கு நிறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் பெரிய திட்டம் எதுவும் இல்லை.

மக்கள் பார்வையில்…ஊழல்

2ஜி ஸ்பெக்ட்ரம்வழக்கிற்கு பிறகு, ஊழல்கள் எதுவுமே மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், எல்லாவற்றையும் சமரசம் பண்ணிக் கொண்டு போவோம் என்று மக்கள் மனநிலை மாறிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.

உங்கள் பார்வையில்அதிகாரிகள்

அரரசியல்வாதிகள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மக்களை சந்தித்து காலில் விழுந்து கெஞ்சி ஓட்டு கேட்கின்றனர். தோல்வியை சந்திப்பதற்கும் வாய்ப்புள்ளது. அதிகாரிகள் 30 - 35 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் தவிர வேறெந்த தண்டனையும்பெறுவதில்லை. புதிதாக மந்திரி வந்தால் இந்த துறையில் இந்த திட்டத்திற்கு இப்படி சம்பாதிக்கலாம் என சொல்லிக்கொடுத்து வழிகாட்டுவது அதிகாரிகள் தான். ஊழலுக்கு அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் தான் காரணம்.

இப்போதைய அரசியல்

ஜெயலலிதா இறக்காமல் இருந்திருந்தால் 2021 வரை எந்த மாற்றமும் இன்றி தமிழகத்தில் தேக்கநிலை இருந்திருக்கும். தற்போது அ.தி.மு.க., நெருக்கடி, அரசு தொடருமா தொடராதா என விறுவிறுப்பான சூழ்நிலைஇருக்கிறது. ஜெயலலிதா கூடவே இருந்த சசிகலா மீதான மக்களின் மிகக் கடுமையான எதிர்ப்பு, மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான நம்பிக்கை

ஒரளவுக்கு அரசியல்வாதிகள்மீது அழுத்தத்தை கொடுத்து முடிவுகள் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் வலிமை உள்ளது.இளைஞர்களும் அதை நம்புகின்றனர். நீங்கள் சாதித்தது எனக்கு சரியெனபட்டதை, வரக்கூடிய எதிர்ப்புகளை சமாளித்து ஊழல்களை அம்பலப்படுத்தியது, மனதுக்கு நிறைவாகஉள்ளது.

அடுத்த கட்ட பயணம்

சமரசம் செய்யாமல் தொடர்ந்து புலனாய்வு கட்டுரைகள் எழுதுவதற்கு பலதரப்பு ஆதரவு தான் காரணம். சரியாக நேர்மையாக ஒரு பணியை செய்தால் மக்கள் ஆதரவு இருக்கும் என்பது தான் நான் கற்ற பாடம்.

இணையதளத்தில் பேச: jayajayakanthan@gmail.com

நன்றி : தினமலர் நாளிதழ் - 01.03.2017

இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28

இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க்து/அநேகமாக. தேசத் தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி 28ம் தேதியை 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

அரும்பெரும் விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகளால் உலகம் வேகமாக மாறி வருகிறது. இதையொட்டி அவர்கள் சந்தித்த சோதனைகளும், அடைந்த சாதனைகளும் வார்தைகளில் கண்டுபிடிப்புகளால் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகாராஜாக்கள், மகாராணிகள் கூட வாழாத சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இயற்கையில் இயல்பாய் தோன்றும் மாற்றங்கள் சில. மனிதனின் அறிவுக் கூர்மையினாலும், விடாமுயற்சியினாலும் உருவாக்கப்படும் மாற்றங்கள் பல. மனிதனின் அறிவுத்திறன் பெருகப் பெருக இயற்கையின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் உண்மைகளும்மலர்ந்த்உ கொண்டே இருக்கின்றன. மனிதனின் முடிவில்லாத முயற்சியின் காரணமாக அன்று மண்ணை அளந்தவன் இன்று விண்ணை அளக்கிறான். ஞானம் முதிர்ந்தது. விஞ்ஞானம் கனிந்தது.

அப்படிய கனிய வைக்கவே 1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி மாங்குடி என்ற ஊரில் சந்திரசேகரய்யர், பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சர்.சி.வி.ராமன். இயற்பெயர் வெங்கட்ராமன். இளம் பருவத்திலேயே கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமையோடு விளங்கினார். இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார். அவருடைய 18 வயதில் அவரது முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.

1917 முதல் 1933 வரை பேராசிரியர் பதவி வகித்தார் ராமன். அப்போது தான் அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு ‘சர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. 1933 முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவன இயக்குனராகப் பணியாற்றினார்.

இதற்கிடையில் 1921ம் ஆண்டு, லண்டனில் உலகப் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது?வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆராய்ந்தார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928ல் கண்டுபிடித்தார்.ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் “ராமன் கோடுகள்” என்றும், அந்த விளைவு “ராமன் விளைவு” என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது.

ஒளிச்சிதறல் பற்றி அறிக்கை தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார்.அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்று தன் படைப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்ட அவர் நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன் மாதமே டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் அப்போதுதான். நோபல் பரிசு பெற்ற அவரின் கண்டுபிடிப்பான ‘ராமன் நிறத்தோற்றம்‘

தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை ஏன் வைக்க வேண்டும்?

வணக்கம் அன்புள்ளங்களே..!

ஆன்மீகம் அறிவோமா..?

தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை ஏன் வைக்க வேண்டும்?

✫ நம் வீட்டின் அறைகளில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்ற ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஒரு டம்ளர் நீரை இரவில் படுக்கும் முன் கட்டிலுக்கு அடியில் வைப்பது.

✬ ஒருவர் மனநோயால் அவதிபடுவதற்கு உயிரியல் மற்றும் உளவியல் ரீதியான காரணிகள் முக்கிய காரணமாக இருந்தாலும், ஆன்மிக ரீதியாக அதாவது கெட்ட சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல்களாலும் ஒருவரது மனம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

✭ உதாரணமாக, ஒருவரது வீட்டில் கெட்ட சக்திகள் அதிகம் இருந்தால், அந்த வீட்டினுள் நுழையும் போதே சந்தோஷமாக இருந்த மனநிலையில் திடீரென்று மாற்றத்தைக் காணக்கூடும். சில பெரியோர்கள் தூங்கும்போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை வைத்துக் கொண்டு தூங்க வேண்டும் என்று சொல்வார்கள்.

✮ இப்படி தூங்கும்போது கட்டிலுக்கு அடியில் நீரை வைப்பதால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேறி, மனஅமைதியுடன் இருக்கும்.

✯ தூங்கும் முன் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெளியே ஊற்றி விட வேண்டும். மீண்டும் மறுநாள் இரவில் புதிய நீரை டம்ளரில் நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

✰ இரவில் ஒரு டம்ளரில் சுத்தமான நீரை நிரப்பி அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலையில் பார்க்கும் போது, அந்நீரில் சிறுசிறு நீர்முட்டைகள் மற்றும் நீர் கலங்கலாக இருந்தால், நீர் எதிர்மறை ஆற்றல் முழுவதையும் உறிஞ்சிவிட்டது என்று அர்த்தம். செய்து கொள்ளுங்கள்!

Monday, February 27, 2017

நவீன இலக்கிய எழுத்தாளரும், சாகித்ய அகாடமி பரிசு வென்றவருமான தி.ஜானகிராமன்

தமிழ் இலக்கிய எழுத்தாளர், நாவலாசிரியர்

நவீன இலக்கிய எழுத்தாளரும், சாகித்ய அகாடமி பரிசு வென்றவருமான தி.ஜானகிராமன் (Thi.Janakiraman) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28).

# திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் (1921) பிறந்தார். தந்தை ஆன்மிக சொற்பொழிவாளர், இசைக் கலைஞர். சிறு வயதில் அவருடன் சொற்பொழிவுகளுக்கு செல்வார். உமையாள்புரம் சாமிநாத ஐயர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயரிடம் இசை கற்றார்.

# தஞ்சாவூரில் புனித பீட்டர் பள்ளி, சென்ட்ரல் பிரைமரி பள்ளி, கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார். பல ஐரோப்பிய இலக்கியங்கள் கற்றார். கல்லூரியில் படித்தபோது, விடுதலைப் போராட்ட கூட்டங்களில் கலந்துகொண்டார். அதுதொடர்பாக பல கதை, கட்டுரைகளை எழுதினார்.

# கும்பகோணம் உயர்நிலைப் பள்ளி, சென்னை எழும்பூர் உயர்நிலைப் பள்ளி, அய்யம்பேட்டை பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும், பின்னர் டெல்லி வானொலி நிலையத்தில் உதவி தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

# தமிழ் இலக்கிய இதழான ‘கணையாழி’ மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது பயண அனுபவங்களை ‘உதயசூரியன்’, ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்ற தலைப்புகளில் வார இதழ்களில் எழுதினார்.

# 1964-ல் வெளியான இவரது ‘மோகமுள்’ நாவல், இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. ‘அமிர்தம்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘நளபாகம்’ உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார். ‘அம்மா வந்தாள்’ நாவல் ஆங்கிலம், குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

# ‘கமலம்’, ‘தோடு’, ‘அவலும் உமியும்’ போன்ற குறு நாவல்கள், ஏராளமான சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘கெட்டிமேளம்’, ‘அக்பர் சாஸ்திரி’, ‘பாயசம்’, ‘பிடிகருணை’, ‘மனிதாபிமானம்’, ‘சக்தி வைத்தியம்’, ‘யாதும் ஊரே’ உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. ‘நாலு வேலி நிலம்’, ‘வடிவேல் வாத்தியார்’, ‘டாக்டர் மருந்து’ ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார்.

# இலக்கியம், இசை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சமையல் கலை, இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். நல்ல மொழிபெயர்ப்பாளரும்கூட.

# தஞ்சை மாவட்டத்தின் பேச்சுவழக்கு, நையாண்டி ஆகியவற்றை தன் கதைகளில் செழுமையாகப் பதிவு செய்தவர். தஞ்சை மண்ணின் பண்பாடும், காவிரி ஆற்றின் அழகும் இவரது எழுத்தில் அற்புதமாக இழையோடுகின்றன. காவிரி பாயும் பகுதிகளில் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகளாக, எழுத்தாளர் சிட்டியுடன் இணைந்து ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூலை எழுதினார்.

# கதைகளில் நுட்பமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தியவர். ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். இவரது எழுத்தில் இசைக்கு முக்கிய இடம் இருக்கும். இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் என போற்றப்பட்டார்.

# தமிழ் இலக்கிய உலகின் தனித்துவம் வாய்ந்த படைப்பாளிகளில் ஒருவரும் ‘தி.ஜா.’ என இலக்கிய உலக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான தி.ஜானகிராமன் 1982-ம் ஆண்டு மறைந்தார்.

அறிந்து கொள்வோம் : நீங்கள் கைதானால் உடனடியாக விடுதலை பெறுவது எப்படி..??

அறிந்து கொள்வோம் : நீங்கள் கைதானால் உடனடியாக விடுதலை பெறுவது எப்படி..??

பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி (BAIL BOND) எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும்,

பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி (BAIL BOND) எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம்   நீங்கள் கேட்கலாம்.

ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல், பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).

உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால், உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு.

உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.
நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.
நீதிமன்றம் துவங்கும் நேரம்.
உங்களுக்காக பிணையாளிகளாக வரத்தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.
முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்புக் கொள்ளச் சொல்வது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படல் :

பிணையில் விடுவிக்கப்பட முடியாத குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கு நியாயமான காரணங்களிருந்தால் காவல்துறை அதிகாரி அவரை பிணையில் விடுவிக்க மறுத்துவிடலாம். அவ்வாறான நிலைமையில், பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களாக இருந்தாலன்றி, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

பிணையில் விடுவிப்பதை எதிர்த்து காவல் துறையினர் கூறும் பொதுவான காரணங்கள் :

குற்றவாளி, விசாரணையின் போது ஆஜராகமாட்டார்.
சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் குற்றம் புரிவார்.
காவல்துறையினரின் புலன் விசாரணை முடியவில்லை.
மேலும் குற்றச்சாட்டுகள் தொடர வேண்டியுள்ளது.
களவு போன பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.
சக குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.
குற்றம் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப் படவில்லை. 

பொதுவாக, குற்றவாளியை காவலில் வைக்கும்படி, காவல் துறையினர் மனுச் செய்வார்கள். அத்தகைய மனுவில், குற்றவாளியை மேலும் காவலில் வைக்க வேண்டியதற்கான காரணங்களை அவர்கள் அளித்திருப்பார்கள். கூடுமான அளவிற்கு, காவல் துறையினர் கூறும் காரணங்களை மறுத்துரைக்க வேண்டும்.

பிணையில் விடுவிக்க மனு :

குற்றவாளியால் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள முடியுமென்றால், அவர் நீதிபதியின் முன்பாக குற்றவாளிக்காக மனுக் கொடுத்து ஆஜராகலாம்.
வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள இயலாதென்றால், குற்றவாளியே நீதிபதிக்கு மனுச் செய்து கொள்ளலாம். இதற்காக சிறை அலுவலரிடமிருந்து மனுவைப்பெற்று, பூர்த்தி செய்து, நீதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், தான் பிணையில் விடுவிக்கப்பட வேண்டியதற்கு தகுந்த காரணங்களைக் கூற வேண்டும்.

அம்மனுவில், தாம் விடுவிக்கப்படுவதற்காக,
கீழ்க்கண்ட சிறப்பு காரணங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
பிணையில் விடுவிக்கப்படாவிட்டால் வெளியேற்றபட நேரிடுமா?
பணியை இழக்க நேரிடுமா?
பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டால், தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு எத்தகைய துன்பம் ஏற்படும்?
காவலில் வைத்திருப்பதால் நலிவுற்ற உடல் நிலையும், சிகிச்சையும் எவ்வாறு பாதிக்கப்படும்?

குற்றவியல் நீதித் துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல் :

பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித் துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.

மேல் முறையீடு :

ஒரு வேளை பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம்.

பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மறுபடியும்  மனுச் செய்து முயற்சிக்கலாம்.

பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள் :

குற்றவியல் நீதித்துறை நடுவர், நிபந்தனை எதுவும் இல்லாமல் சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு
பிணையாளிகளுடன் அல்லது பிணையாளிகளின்றி பிணை முறி எழுதிக் கொடுத்தால் பிணையில் விடுவிக்கலாம்.

சிறப்பு நிபந்தனைகளில், குறிப்பிட்ட நேரங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்று கூறப்பட்டிருக்கும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கலாம்.

நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் மறுத்தால், குற்றவாளி அதை மறுத்துவிடலாம். ஆனால். அவ்வாறான நிலைமையில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு. அவருக்குச் சாதகமான முடிவு செய்யப்படும் வரையில் அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.

பிணை முறிவும், பிணையாளிகளும் :

பிணையாளிகளுடனோ அல்லது பிணையாளிகள் இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம்.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜராவதற்கு, குறிப்பிட்ட தொகையைப் பிணையாக உத்திரவாதம் அளிக்கும் நபர்களே பிணையாளிகள் ஆவர்.

பிணையாளிகளாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கேட்கப்பட்டால் பிணையாளியாக இருக்கத் தயார் என்பதையும் போதிய நிதிவசதி உண்டு என்பதையும் பிரமாணத்தின்பேரில் நீதி மன்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

அவர்களுக்குப் பிணை அளிப்பதற்குப் போதிய நிதிவசதி உள்ளது என்பதோடு வேறு வகையிலும் பிணையாளிகளாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யலாம்.

எந்தவிதக் காரணமும் கூறாமல். பிணையாளியை ஏற்க மறுத்துவிடக் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. பிணையாளிகள் நீதிமன்றத்தில் இல்லாவிட்டால், காவல் துறையினர் அவர்களை விசாரித்து, ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள் எனத் தீர்மானிக்கும் வரை, கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.

பிணையாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நிரந்தர முகவரியும், பிணையளிப்ப தற்கு அவர்களது கடன்கள் நீக்கி, போதுமான அளவிற்கு நிதி வசதியும் இருக்க வேண்டும். பிணையாளிகள் தங்களது ரேஷன் கார்டு, வாடகை ரசீது, வைப்பீட்டு நிதி அட்டை, சம்பளப் பட்டியல். வருமான வரி ரசீது போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தொழில் முறையில் பிணையாளிகளாக இருந்தால் அன்றி, அவர்களது தனிப்பட்ட குண இயல்பு, அரசியல் கருத்துக்கள், பழைய குற்றவாளியா, ஆணா, பெண்ணா என்பதைக் காரணங்காட்டி பிணையாளிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் காவல் துறைக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இல்லை.

நன்றி
Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) : 99949 61613
E-Mail: sanctuarylegal@gmail.com
Web : www.sanctuarylegal.in