மகா: என்னங்க நான் ஒன்னு சொன்னா கோபப்படாம கேட்பீங்களா..?
மகேஷ்:சொல்லு மகா கல்யாணம் ஆகி 7 வருஷமாகுது என்னைக்காவது உன் மேல எனக்கு கோபம் வந்துருக்கா..
மகா: நமக்கு கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகுது ஆனா ஒரு குழந்தை இல்ல.. டாக்டர் என் கிட்டதா குறைனு சொல்லிதாங்க.. அத்தைய பார்த்தா பாவமா இருக்குங்க..
பக்கத்து வீட்டுக் குழந்தையல்லாம் தூக்கி கொஞ்சுரது பார்த்தா அவங்களுக்கு ஒரு குழந்தை பெத்து தர முடியலயேனு ரொம்ப வருத்தமா இருக்குங்க...
(அழுரா)
அதனால...
மகேஷ்: அதனால...??
மகா: நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் ப்ளீஸ்..
அவளை உதறிவிட்டு எழுந்திக்கிறான்..
இனிமேல் இப்படி பேசாதே...
அம்மா உன்னை எதுனா திட்டுனாங்களா..?
மகா: அய்யோஅவங்க மேல குறை சொன்னாநான் பாவிங்க..
மகேஷ்: அப்புறம் என்ன இந்த பேச்ச இனிமேல் பேசாதே ..
மகேஷ் கோபமா ஆபீஸ் போய்டுறான்..
இவர் கிட்ட சொல்லி எந்த
யூஸூம் இல்ல..
அத்தைகிட்ட சொல்லலாம் அவங்க சொன்னாதா இவர் கேட்பார்னு முடிவு பன்றா...
மகா: அத்தை உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..
அத்தை: சொல்லுமா..
காலைல மகேஷ் கிட்ட சொன்னது முழுக்கச் சொல்லி முடிக்கறா..
அத்தை: குழந்தை இல்ல அதானே உன் கவலை..
நீ ஏன் ஒரு குழந்தைய தத்து எடுத்து வளர்க்கக் கூடாது..
இந்த வீட்டுக்கு ஒரு பொண்ணு வரனும்னு நினைச்ச நீ ஒரு குழந்தைவரனும்னு ஏன் நினைக்கல..
மகா: அத்தை அது எப்படி சரியா வரும்.
அத்தை: ஏன் வராதுமா?
உன்கிட்ட ஒன்னு சொல்றேன்...
மகேஷ் என் பிள்ளை இல்லை....
மகா: அத்தை.....(அதிர்ச்சியோடு)
அத்தை: ஆமாம் மா மகேஷ் எனக்கு பிறக்கல..
சொல்லப் போனா நான் இன்னும் கன்னி கழியாத கிழவி மா...
மகேஷோட தாத்தா அனாதையா நின்ன என்னை தத்து எடுத்து வளர்த்தார்...
அவர் பொண்ணுக்குப் பிறந்த குழந்தை தான் மகேஷ்....
குடும்பத்தோட கோவிலுக்குப் போய்த்து வரும்போது ஒரு அக்ஸிடன்டுல மகேஷ் தவிற எல்லாரும் இறந்துதாங்க..
அப்போ முடிவு பண்ணேன் மகேஷ் என் பிள்ளைனு அதுக்காக நான் கல்யாணம் கூட பன்னிக்கல..
இந்த விஷயம் நான் சாகுற வரை மகேஷ்கிட்ட சொல்ல மாட்டனு சத்தியம் பன்னுமா....
மகா கண்களில் நீரோட அவள் அத்தையை பார்த்து
அவள் அத்தை என்று கூறிய வார்த்தை மருகி அம்மா என்று ஒலித்தது....!
குழந்தை இல்லை என்று ஆயிரம் கோவில் சென்று வரும் நீங்கள் ஒரே ஒரு முறை அனாதை இல்லம் சென்று வாருங்கள்...
திரும்பி வரும் போது நீங்கள் அம்மாவாய் அப்பாவாய் திரும்புவது சத்தியம்...!
No comments:
Post a Comment