Monday, November 28, 2016

பிரம்மாஎன்பதுசத்தியமாகபெண்தான்

#பிரம்மாஎன்பதுசத்தியமாகபெண்தான்...

நரம்புகள் புடைத்து; இடுப்பு எலும்பு கழண்டு;
கண்களில் நீர் தெறித்து; அலறலில் குரல் கிழிந்து;
உச்சபட்ச வலியில் மரணத்தின் உச்சத்தை தொட்டு;
செத்தேவிட்டோமென்று செல்கள்
அழுது;
இனி ஒரு பிள்ளை வேண்டாமென்று
ஆங்காரத்தில் சிந்தனை உடைந்து;
செவியின் சவ்வுகள் ஆக்ரோஷத்தில் அடைத்து;
சிறுதுளையைப் பிய்த்து;
அடிவயிறு மரண பீதியில் மாய்ந்து;
குடல்கள் சுருட்டி; விழிகள் இருட்டி;
வியர்வை பூத்து; இமைகள் வியர்த்து;
மெல்லிய குரலில் ஒர் அழுகையைக் கேட்க;
இருதயமது அன்னிச்சையாய் இளகி விட;
பிசு பிசு என்று ஒரு உடல் என்னிடம் வர;
வலியெல்லாம் மறந்து; களைப்பெல்லாம் களைந்து;
உள்ளமது பூரித்து; முகம் முழுவதும் மகிழ்ச்சியில் நான்;

#தாய்மை_அப்படித்தான்

#அம்மாஎன்றபெயர்சும்மாவந்ததல்ல.....

No comments:

Post a Comment