#என்னக்கு..
ஓர் மணவாளனை தேடி
நான் எழுதிய ஓர் கவிதை..
முத்து முத்து
!!....எனக்கு
நா
ஶ்ரீராமன் தேடவில்லை
நா
எங்களுள் வாழும் தெய்வம்..
திரும்பி வராத இடத்துக்கு
தீக்குளித்து போறேன் எங்களுக்கு
ஶ்ரீராமன் தேவையில்லை..
தீக்குளிக்க வைத்தால்
மீண்டு வர எங்கள் பெண்
தெய்வச் சீதையல்ல
ரத்த சதையுமாய்..எண்ண கனவுமாய்..
வாழும் ஓர் சக மனுஷியே....!!!
கடவுளே ஆயினும்
கண்ணனையும் தேடவில்லை
எங்கள் எண்ணத்தில் புதைந்திருக்கும்..
'ஒருவனுக்கு ஒருத்தி' எனும்
வாழ்க்கை வழி காட்டலை..
'பாமா,ருக்மணி'என்ற..
இரு இதயத்திற்குள்..
அடைபட்டு போய்..வலி விட்டு செல்வானே..
எங்கள் பெண்ணை..
அழ விட்டுச் செல்வானே..!!!
முக்கண் வைத்திடினும்
நாங்கள் ஈசனையும் தேடவில்லை..
சக்திக்கு தன்னில்
சரி பாதி தந்தாய் - சரி..
உன் தலை மேல்..கங்கை பெண்ணுக்கு..
ஏன் இடம் தந்தாய்..?
உன் நெற்றிக்கண் எரிக்க
எங்கள் பெண் ஆதிசக்தியல்ல
ஆனாலும் அவள் எங்களின்
ஆச்சர்ய சக்தி தான்..!!!
பின் எப்படிப்பட்ட..
மணவாளன் தான் வேண்டும்..??
மயக்கும்
மன்மதன் வேண்டாம்..?
தயக்கமில்லா..
ஆண்மகன் வேண்டும்..!
கட்டிளங்காளை வேண்டாம்..?
கண்ணியமாய் காப்பாற்ற
கருணை மனம் வேண்டும்..!
அண்ணாந்து பார்க்கும்
மாளிகை வேண்டாம்..?
கூரையிலும் அனுசரித்து போகும்..
அன்பு போதும்..!
ஆக மொத்தம் மகான் வேண்டாம்..
உணர்ந்து வாழ
#நல்ல_மனிதன்_போதும்.."!!
No comments:
Post a Comment