பந்தல் அவரை சாகுபடியில் விவசாயின் அனுபவம்
பயிர் நடவு செய்த 20 நாட்களுக்குள் 2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா, 1 கிலோ டிரைக்கோடிடர்மா விரிடி ஆகியவற்றை 50 கிலோ ஆறிய மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது விதைக்க வேண்டும்.
கொடி பந்தலை தொட்டவுடன் பந்தலின் இரு பக்கமும் கொடிகளை எடுத்து பிரித்து கொஞ்ச தூரம் கொடி ஓடிய பிறகு கணு பகுதியை பந்தல் கம்பியுடன் சேர்த்து நார் கொண்டு கட்டி விடவேண்டும்.
3மாதத்தில் கொடி பந்தலை அடைத்து விடும்
வேப்புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 25 கிலோ கடலைப் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 25 கிலோ கலந்து போடலாம்.
70 முதல் 80 நாட்களில்
பூக்கள் அதிகம் பிடித்து காய் வர ஆரும்பிக்கும் அந்த சமையத்தில்
பஞ்சகவ்யா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்
அல்லது
3 நாட்கள் புளிக்க வைத்த தயிர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம். இவற்றில் தெளித்தால் பூக்கள் அதிகம் பிடிக்கும்.
பூச்சி விரட்டி மருந்தாக தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
அவரைக் கொடி அடம்பாக இருக்கும் பட்சத்தில் ஆட்கள் மூலம் பழுத்த இலைகள் கணுப்பகுதியில் உள்ள இலைகளை அகற்றி விடவும் அப்பொழுதுதான் காற்றோட்டம் அதிகம் ஏற்பட்டு பூக்கள் பிடிக்கு காய்கள் நன்கு காய்க்கும்
Monday, November 21, 2016
பந்தல் அவரை சாகுபடியில் விவசாயின் அனுபவம்
Labels:
விவசாயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment