Tuesday, November 29, 2016

சட்டம் அளிக்கும் பாதுகாப்பில் அனைவரும் சமம்.

லா பவுண்டேஷன் ஈரோடு மாவட்டம்

சட்டம் படித்து புரிந்து கொண்டு பயன்படுத்துங்கள் ;🎩🎩🎩🎩🎩
இந்திய அரசியல் சாசனம் 1950
கோட்பாடு 14
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.சட்டம் அளிக்கும் பாதுகாப்பில் அனைவரும் சமம்.

இந்திய சாட்சிய சட்டம் 1872 பிரிவு 74
அரசு ஆவணங்கள் சட்டமன்றத்துறை ஆவணங்கள் நீதிதுறை ஆவணங்கள் பொது ஆவணங்கள்

குற்ற விசாரணை முறைச் சட்டம் 1973
பிரிவு 154 (1)
கைது செய்ய கூடிய குற்றம் நடைபெறுவதை தெரியவந்தாலோ நடைபெற்று இருந்தாலோ
அல்லது உங்களுக்கே நடைபெற்று இருந்தாலோ இந்த பிரிவை தலைப்பாகை எழுதி அல்லது டைப் செய்தோம் பதிவு தபால் முலாம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம்

இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 52
நல்லெண்ணம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதா அல்லது காவல்துறையில் புகார் மனு கொடுப்பவர்கள் நல்லெண்ணம் அடிப்படையில் கொடுத்துள்ளார்களா காவல் அதிகாரிகள் விசாரணையில் யுகிக்க வேண்டும். நல்லெண்ணம் படி காவல் அதிகாரிகள் நடந்து கொள்கிறார்களா.

இந்திய அரசியல் சாசனம் 1950
கோட்பாடு 251
மாநிலங்கள் சட்டம் இயற்றுவது அந்த மாநிலங்குள் மட்டும் தான் செல்லும் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டம் இந்தியா முழுவதும் செல்லும் ஆனால் நாடாளுமன்றத்திற்கு எதிராக மாநிலங்கள் சட்டம் இயற்றினால் அச்சட்டம் செல்லாது.

இந்திய அரசியல் சாசனம் 1950
கோட்பாடு 13
இந்த சட்டத்திற்கு எதிராகவோ உள்ள சட்டம் செல்லாது
இந்த சட்டத்திற்கு முன்பாக இயற்றிய சட்டம் இந்த சட்டத்தை ஒடுக்கும் அளவு இருந்தால் அச்சட்டம் உயிர் இல்லாத சட்டம் ஆகும்

அன்புடன்,
லா பவுண்டேஷன் ஈரோடு மாவட்டம்
பிரேம் நாத் என்கிற பிரபு
91599 47407

No comments:

Post a Comment