#அன்புள்ள_அம்மாவுக்கு
இறைவன் உலகை காண்பிப்பதாக சொல்லி உன் கருவரையில் பிரவேசிக்க செய்தான்…!
இருட்டாக இருந்தாலும் இதமாக இருந்து இப்புதிய இடம்.
முதலில் பயமாக இருந்தது பின் சந்தோஷமாக வழர தொடங்கினேன்.
நீ சிரிக்கும் போது நானும் சிரித்தேன்.
நீ அழும் பொழுது நானும் நனைந்தேன்.
பிறகு தான் புரிந்தது நம்மிடயே புது உறவு மலர்ந்தது என்று.
ஆமாம் நீ என் #அம்மா.
இப்படியே பல விசயங்களை யோசித்துக்கொண்டே வழர்ந்தேன்.
உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தாது.
உன்னை காணும் நாட்களை எண்ணி எண்ணி துடியாய் துடித்தேன் உன் கருவறையில்.
ஒரு தீரத வலி ஒன்று என்னை ஆட்க்கொண்டது அம்மா.
யாரோ என் உடலசைவுகளை செயலிலக்க செய்தார்கள்.
ஒரு நிமிடம் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்தேன்.
உன்னையும் பார்க்காமலேயே உயிர் பிரிகிறேன்.
உன்னோடு விளையாட ஆசை பட்டேன் என் பிறப்பே விளையாட்டாக யோய் விட்டதே #அம்மா
புதிதாக இன்னொரு ஆசையும் கூட…
மீண்டும் அதே இருட்டறையில் உன் அன்பு மகளாக உலா வர வேண்டும்.
மீண்டும் நுகர வேண்டும் உன் கருவறை வாசனையையும் உன்னையும் காண வேண்டுமே அம்மா.
இப்படிக்கு.
#பிறவாத_உன்_குட்டி_பாப்பா_மா
…………………………………………………………………………………
வேதனையிலும் வேதனை சுமந்த கருவை உயிருடன் பெற்றெடுக்காதது.
அத்தாயின் வேதனைக்கு அளவுண்டோ.
No comments:
Post a Comment