Wednesday, November 30, 2016

வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள்

📖சட்டம் அறிந்து கொள்வோம்

வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள்

“வன்புணர்ச்சி” என்பது, கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் ஒரு ஆண், பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதைக் குறிக்கும்.
1. அவளது விருப்பத்திற்கு விரோதமான உடலுறவு. செக்ஸ் ஊழியரான பெண்ணுடன்(விபச்சாரி), அவளது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வதுகூட கற்பழிப்புதான்;
2. கணவனைப் போல் பாசாங்கு செய்து ஒப்புதலைப் பெறுவது;
3. கொன்றுவிடுவதாக மிரட்டி ஒப்புதல் பெறுவது;
4. நாம் எதற்குச் சம்மதிக்கிறோம்? அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத 16 வயதிற்குக் குறைந்த பெண்ணிடம் சம்மதம் பெறுவது, அல்லது போதைப் பொருள் செலுத்தப்பட்ட நிலையில் அல்லது குடிவெறியில் சுயநினைவில்லாதபோது சம்மதம் பெறுவது அல்லது மனநோயாளிப் பெண்ணின் சம்மதம் பெறுவது;
5. மனைவி 15 வயதிற்குக் குறைந்த சிறுமியாக இருந்தால், அவளோடு உடலுறவு வைத்துக் கொள்வதும் வன்புணர்ச்சிக் குற்றமாகவே கருதப்படுகிறது.
6. நீதிமன்றக் கட்டளை, சம்பிரதாயம், சடங்குகள் காரணமாக கணவனும், மனைவியும் தனித்தனியாக வாழும்போது, கணவன் மனைவியின் சம்மதம் பெறாமல் உடலுறவு வைத்துக் கொள்வது கற்பழிப்புக் குற்றமாகும்.
வன்புணர்ச்சி நடந்ததும் என்ன செய்ய வேண்டும்?
1. தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கற்பழிப்பு நடந்ததை அந்தப் பெண் சொல்ல வேண்டும். அவருடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும். தாமதப்படுத்தினால். அவள் கற்பழிக்கப்பட்ட அடையாளங்கள் அகன்று, “கற்பழிக்கப்பட்டது” என்ற குற்றத்தை அந்தப் பெண் நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும்.
2. கற்பழிக்கப்பட்ட பெண், உடனடியாகக் குளித்துவிடக்கூடாது. துணிகளையும் துவைக்கக் கூடாது. ஏனெனில், கற்பழிக்கப்பட்டது அவள் இருக்கும் நிலை, கற்பழிப்புக் குற்றத்திற்கு முக்கியமான சான்றாகும். அது மட்டுமல்ல; கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடையில் கற்பழித்தவனது ரத்தத் துளிகள் அல்லது ரோமம் இருக்கலாம். அவற்றைக் கொண்டு கற்பழிப்பில் ஈடுபட்டவனைப் பிடித்து விடமுடியும். அவனுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபித்துவிட முடியும்.
3. கற்பழித்தவர் செல்வாக்குள்ள நபராக இருந்தால், கற்பழிப்புச் சம்பவம் பற்றி முதலமைச்சர், மாநிலத் தலைமைப்போலீஸ் அதிகாரி, அப்பகுதி எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியாளருக்குக் கடிதங்களை அனுப்ப வேண்டும்.
காவல்துறையினரின் கடமைகள்:
1. காவல் நிலையத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரி, கற்பழிக்கப்பட்ட பெண் தரும் விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்துவிட்டு, அந்தப் பெண்ணிற்கு அதைப் படித்துக் காட்ட வேண்டும். அதில் ஒரு பிரதியை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தரவேண்டும். காவல்துறை அலுவலர் அந்தப் பெண்ணின் புகாரைப் பதிவு செய்து கொள்ள மறுத்துவிட்டால், அந்தப் பெண் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரையோ அல்லது உள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரையோ அணுக வேண்டும்.
2. காவல்துறையினர், அந்தப் பெண்ணை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று, உடற் கூறு சோதனை செய்ய வேண்டும். அந்தப் பெண்ணின் உடல் நிலை, அவளது மனநிலை ஆகியவை குறித்து மருத்துவர் அறிக்கைத் தருவார். இந்த அறிக்கை, கற்பழிப்பு குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு மிக முக்கியமானதாகும். மருத்துவர்தான் அந்தப் பெண்ணைச் சோதிக்க வெண்டும். காவல்துறையினர் தொடக்கூடாது. அருகாமையில் காவல் நிலையம் இல்லை என்றால், அந்தப் பெண், அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகி, உடற்சோதனை செய்து, அந்த அறிக்கையின் பிரதியொன்றை, தன் வசம் வைத்திருக்க வேண்டும்.
3. கற்பழிக்கப்பட்டவர் பெயரையோ அல்லது அதுபற்றிய விவரத்தையோ, காவல் துறையினர் வேறு எவரிடத்திலும் கூறக்கூடாது.
கற்பழிப்பிற்குத் தண்டனை:
கற்பழிப்புக் குற்றத்திற்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. சில கற்பழிப்பு வழக்குகளில், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, நீதிமன்றம், ஆயுள் சிறை தண்டனையும் வழங்கும்.
கீழ்கண்ட வகையைச் சார்ந்த கற்பழிப்பு வழக்குகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது:
1. காவலில் இருக்கும்போது கற்பழிக்கப்பட்டால்;
2. கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணைக் கற்பழித்தவனுக்கு,
3. பனிரெண்டு வயதுக்குக் குறைந்த சிறுமி கற்பழிக்கப்பட்டால்,
4. ஒரு பெண் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை பல ஆண்கள் கூட்டாகச் சேர்ந்து கற்பழித்தால்;
வன்புணர்ச்சி வழக்குகளில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்:
1. நீதிமன்றங்களில் வன்புணர்ச்சி வழக்குகள் ரகசியமாக நடத்தப்படுகின்றன.
2. காவலில் பெண் கற்பழிக்கப்பட்டால், எடுத்துக்காட்டாக சிறைகளில் அல்லது மருத்துவமனையில் கற்பழிப்பு நடந்தால், குற்றம் சாட்டப்பட்ட நபர், தான் கற்பழிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமே தவிர, தான் கற்பழிக்கப்பட்டதாக அந்தப் பெண் நிரூபிக்கத் தேவையில்லை
3. தனது பொறுப்பில் இருக்கும் பெண்ணை, அந்த நபர் கற்பழித்தால், அந்தப் பெண் சம்மதம் கொடுத்திருந்தாலும் கற்பழித்த நபருக்குச் சிறைத் தண்டனை உண்டு.
4. தான் செய்வது என்னவென்று புரிந்து கொண்ட நிலையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபடும் 10 வயதுச் சிறுவனையும் தண்டிக்க முடியும்.
5. கற்பழிப்புக் குற்றம் நடப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் உடந்தையாக இருந்த ஆண் அல்லது பெண், குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார்.

நன்றி
திரு - #DhaneshBalamurugan#

Shores Form -
https://m.facebook.com/groups/1620122248301967?view=permalink&id=1686912071622984

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

பயிர் பாதுகாப்பு : தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

1.நாற்றழுகல்
2.முன்பருவ இலைக்கருகல்
3.ஃபுசேரியம் வாடல்
4 .செப்டோரியா இலைப்புள்ளி
5 .பாக்டீரியா வாடல்
6.பாக்டீரியா இலைப்புள்ளி
7 .தக்காளி தேமல் நோய்(TMV)
8.இலை சுருட்டை நோய்(TLCV)
9.தக்காளி புள்ளி வாடல் (TSWV)
1. நாற்றழுகல்:

அறிகுறிகள் :

நாற்றழுகல் தக்காளியில் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. அதாவது முளைக்குமுன் மற்றும் முளைத்தபின் ஏற்படுகிறது.
முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்று இறந்துவிடுகிறது.
முளைக் குருத்து முற்றிலுமாக அழுகிவிடும்.
முளைத்த பின் நிலையில் இளம் திசுக்கள் நில மட்டத்திலேயே நோய்த் தொற்று ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாகவும், நீர்த் தோய்ந்தும் காணப்படும். நாற்று தலை கீழே வீழ்ந்து அல்லது உடைந்து விழுந்துவிடும்.
மேலாண்மை :

உயர்த்தப்பட்ட நாற்றங்கால் மேடைகளை உருவாக்க வேண்டும்.
தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் சரியான வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2% அல்லது போர்டிக்ஸ் கலவை கொண்டு நனைக்க வேண்டும்.
டிரைக்கோடெர்மா விரிடி (4கி / கிலோ விதை) அல்லது தைரம் (3கி / கிலோ விதை) விதை சிகிச்சை அளிப்பது ஒன்றே முளைக்குமுன் ஏற்படும் நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
மேகமூட்டமான வானிலை இருக்கும்பொழுது 0.2% மெட்டாலிக்ஸில் தெளிக்கவும்.
2. முன்பருவ இலைக்கருகல் :

அறிகுறிகள்:

இது தக்காளியின் எந்த வளர்ச்சி நிலையிலும் பொதுவாக இலைகளின் மீது ஏற்படும் நோய் ஆகும்.
பூஞ்சை இலைகளை தாக்கும்பொழுது இலையில் புள்ளிகள் ஏற்பட்டு கருகத் தொடங்கும். முன்பருவ இலைக்கருகல் அதிகமாக வயது முதிர்ந்த இலைகளில் சிறியதாக கருப்பு காயங்களாக காணப்படும்.
புள்ளிகள் பெரிதாகி மற்றும் பொதுவான வளையங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும்.
திசுக்களை சுற்றியுள்ள புள்ளிகள் மஞ்சள் நிறமாகின்றன. அதில் வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஏற்படும்பொழுது அதிக அளவில் இலைகள் இறந்துவிடுகின்றன.
இலையைப் போன்றே தண்டுகளிலும் காயங்கள் ஏற்படுகின்றன.
பின்பருவ அழுகல் நோயினால் தாவரம் பிடுங்கி நடும்பொழுது பூஞ்சையால் பாதிக்கப்பட்ட சில சமயங்களில் இறந்துவிடுகிறது. இந்த பூஞ்சை புள்ளிவட்டம் அல்லது தண்டு வழியாக பழங்களை பாதிக்கிறது.
காயங்கள் பொதுவாக பழம் முழுவதிலும் காணப்படுகின்றன. பொதுவான வளையங்கள் பழங்களில் காணப்படும்.

மேலாண்மை :

பயிர் குப்பைகளை அகற்றுதல் மற்றும் அழித்தல்
பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.
திறம்பட நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்.
3. ஃபுசேரியம் வாடல் :

அறிகுறிகள் :

நோயின் முதல் அறிகுறியாக கிளை நரம்புகள் தெளிவாகி இலைகளில் பசுமை சோகை ஏற்படுகிறது.
இளம் இலைகள் கருகி சில நாட்களில் இறந்துவிடும். இலைக்காம்பு மற்றும் எல்லா இலைகளும் வாட ஆரம்பிக்கும்.
இளம் இலைகளின் கிளை நரம்புகள் வெளியெ தெரிந்து இலைக்காம்பு உதிர ஆரம்பிக்கும். விளை நிலங்களில் கீழ் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் சிற்றிலைகள் கருகி இறந்துவிடும்.
அறிகுறியின் தொடர்ச்சியாக மற்ற இலைகளுக்கும் பரவ ஆரம்பிக்கும். கடைசி நிலையில் வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமாக மாறுகிறது. தாவர வளர்ச்சி குன்றி பின்பு இறந்துவிடும்.

மேலாண்மை :

பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.
கார்பென்டிசம் (0.1%) கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மூழ்கச் செய்ய வேண்டும்.
பயிர் சுழற்சி முறையில் சாராத் தாவரங்களை அதாவது தானியங்களைப் பயிரிட வேண்டும்.
4. செப்டோரியா இலைப்புள்ளி :

அறிகுறிகள் :

தாவரம் அதன் எந்த வளர்ச்சி நிலையிலும் பாதிக்கப்படலாம். நோய் சிறிய சாம்பல் நிற, வட்ட இலைப் புள்ளிகளுக்கு மேல் இருண்ட எல்லைகளைக் கொண்டிருக்கும்.

மேலாண்மை :

பாதிக்கப்பட்ட தாவர பகுதிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்.
தைராம் அல்லது டிதேன் M-45 (2கி / கிலோ விதை) கொண்டு விதை சிகிச்சை அளிப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய் தொற்றைக் குறைக்கலாம்.
மேன்கோசெப் 0.2% விளை நிலங்களில் தெளிப்பதன் மூலம் திறம்பட நோயைக் கட்டுப்படுத்தலாம்.
5. பாக்டீரியா வாடல் :

அறிகுறிகள் :

தக்காளிப் பயிரில் ஏற்படும் கடுமையான நோய்களில் ஒன்றாகும். ஒப்பீடுகையில் அதிக மண் ஈரம் மற்றும் மண் வெப்பநிலை இந்நோய்க்கு ஏதுவாக உள்ளது.
பாக்டீரியா வாடல் அறிகுறியின் தன்மை வளரும் தாவரங்களை விரைவாக மற்றும் முழுமையாக வாடச் செய்வதாகும்.
கீழ் இலைகள் வாடுவதற்க முன்பே விழுந்துவிடும்.
நோய்க் கிருமி தண்டு நாளங்களில் படையெடுத்து திசுக்களை மஞ்சள் பழுப்பு நிறமாக நிறமாற்றமடையச் செய்கின்றன.
பாதிக்கப்பட்ட தாவர பகுதியை வெட்டி சுத்தமான நீரில் மூழ்கச் செய்யும்பொழுது பாக்டீரியா வெள்ளைக் கீற்றை போல் வெளியே வரும்.
இவை காயங்கள் மண் மற்றும் இதர சாதனங்களால் பரவுகின்றன.
நாற்று நடும்பொழுது நாற்றிற்கு சேதம் ஏற்படாமல் நட வேண்டும்.
வெளுக்கும் தூளை 10 கிலோ / ஹெக்டருக்கு கொடுக்க வேண்டும்.

மேலாண்மை :

பயிர் சுழற்சியாக தட்டைப்பயறு – மக்காச்சோளம் – முட்டைக்கோஸ், வெண்டை – தட்டைப்பயறு – மக்காச்சோளம், மக்காச்சோளம் – தட்டைப்பயறு மற்றும் கேழ்வரகு – கத்தரி போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயைக் குறைக்கலாம்.

6. பாக்டீரியா இலைப்புள்ளி :

அறிகுறிகள் :

ஈரமான வானிலை மற்றும் தொடர் மழை நோய் வளர்ச்சிக்கு உகந்தது. அதிக மழைப் பெய்யும் இடங்களில் திடீரென்று இந்நோய் தோன்றுகிறது.
பாதிக்கப்பட்ட இலைகள் சிறியதாக, பழுப்பு நிறமாக, நீர் தோய்ந்து, வட்டப் புள்ளியைச் சுற்றிலும் மஞ்சள் நிற வட்டம் தோன்றுகிறது.
முதிர்ந்த தாவரங்களில் முதிர்ந்த இலைகளில் தொற்று ஏற்பட்டு இலைகள் உதிர்கின்றன.
முக்கிய அறிகுறி பச்சை பழங்களில் தோன்றும்.
மத்தியில் உள்ள காயங்கள் ஒழுங்கற்றதாகவும், வெளிர் பழுப்பு மற்றும் கடினமான சிரங்குடைய மேற்பரப்புடன் காணப்படும்.
பழுத்த பழங்கள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. விதையின் மேற்பரப்பில் பாக்டீரியா காணப்படும். விதையின் மற்ற பகுதிகளிலும் சில நேரம் காணப்படும்.
தாவர குப்பையிலிருந்து தானாக தக்காளிச் செடிகளுக்கு பரவுகின்றன.
மேலாண்மை :
நோயற்ற விதை மற்றும் தாவரங்களையே பயன்படுத்த வேண்டும். சாராத் தாவரங்களை பயிர் சுழற்சி மூலம் பயிரிட்டால் சென்ற வருட பயிர் சக்கைகளை தவிர்க்கலாம்.

மெர்குரிக் குளோரைடு (1:1000) கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நோயைத் திறம்பட கட்டுப்படுத்த தாமிரம் மற்றும் உயிர்ம பூஞ்சாணக் கொல்லியை சேர்த்து 5 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் அல்லது அக்ரிமிசின் – 100 (100ppm) 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
7. தக்காளி தேமல் நோய்:

அறிகுறிகள் :

தாவரத்தில் வெளிர், பச்சை புள்ளியமைப்புடனும் மேலும் இளம் இலைகள் வெயில் நாட்களில் வாடத் தொடங்கும். இவை நோயின் ஆரம்பத் தொற்றாகும்.
பாதிக்கப்பட்ட இலைகள் உருத்திரிந்து, மடிப்புடன், அளவை விட சிறயதாக இருக்கும். சில நேரங்களில் இலைகள் “பன்னம் இலை” அறிகுறியைக் காட்டும்.
பாதிக்கப்பட்ட தாவரம் வளர்ச்சி குன்றி வெளிர் பச்சை நிறமாகிறது.
வைரஸ் ஆடைகள், கைகளால் வேலை செய்யும் ஆட்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் பாதிக்கப்பட்ட செடியை கையாண்டுவிட்டு அல்லது தாவர குப்பைகளைக் கையாளும்பொழுது பரவுகிறது.

மேலாண்மை :

விதைப்பிற்கு நோயற்ற ஆரோக்கியமான செடிகளின் விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு டிரைசோடியம் பாஸ்பேட் (90கி / ஒரு லிட்டர் தண்ணீர்) கரைசலில் ஊற வைப்பதன் மூலம் நோயைக் குறைக்கலாம்.
விதைகளை நன்கு அலசி நிழலில் உலர்த்த வேண்டும். பண்ணையில் பாதிக்கப்பட்ட தாவரங்களை கவனமாக அகற்றி அழித்துவிட வேண்டும். வைரஸ் நோய் தொற்று கொண்ட நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்த கூடாது.
புகையிலை, உருளைக்கிழங்கு, மிளகாய், குடைமிளகாய், கத்தரி போன்றவற்றை தவிர மற்ற பயிர்களை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
8. இலை சுருட்டை நோய்:

அறிகுறிகள் :

புதிதாக வளரும் தக்காளி செடியின் மஞ்சள் இலைகள் சுருண்டு தாவரத்தின் வளர்ச்சி குறைந்துவிடும்.
புதிய இலைகள் அளவில் குறைந்து சுருங்கி, நரம்புகள் மஞ்சள் நிறமாகிவிடும். இலைகள் மேல் நோக்கி சுருண்டு பார்ப்பதற்கு கிண்ணம் போல் இருக்கும்.
மலர்கள் தோன்றும் ஆனால் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்துவிடும்.

மேலாண்மை :

மஞ்சள் ஒட்டும் பொறியை வெள்ளை ஈக்களை கண்காணிக்க 12/ஹெக்டர் என்ற அளவில் வைக்க வேண்டும்.
விளை நிலங்களைச் சுற்றி வேலிப் பயிராக தானிய வகைகள் பயிரிட வேண்டும்.
களைகளை நீக்க வேண்டும்.
நாற்றுகளை வலை கூடாரம் அல்லது பசுமை  கூடாரத்தில் பாதுகாக்க வேண்டும்.
இமிடா குளோரைடு 0.05% அல்லது டைமெதோட் 0.05% ஐ நடவு முடிந்து 15, 25, 45 ஆகிய நாட்களில் தெளித்தால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
9. தக்காளி புள்ளி வாடல் நோய் :

அறிகுறிகள் :

இலைகள், தண்டு மற்றும் பழங்களில் கோடுகள் காணப்படும்.
சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.
இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறுகின்றன.
பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்கு பல புள்ளிகள் காணப்படும். பழுத்த பழங்களின் கழுத்துப் பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகின்றன.
புள்ளி வாடல் வைரஸ் செடிப்பேன் மூலம் பரவுகின்றன.

மேலாண்மை :

பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்
பிற ஊள் வழங்கிளை நீக்குவதன் மூலம் வைரஸை குறைக்கலாம்.
வேலிப் பயிர்களை அதிகரிக்கலாம். தக்காளி விதைப்பதற்கு முன் விளைநிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம்.
இமிடா குளோரைடு 0.05% அல்லது ஊடுறுவும் பூச்சிக் கொல்லிகளை தெளித்து தெளித்து வைரஸை கட்டுப்படுத்தலாம்.
நன்றி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

..........................................................................

தக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட…

வேம்பு, புங்கன் கரைசல்!

வேப்பெண்ணெய் 4 லிட்டர், புங்கன் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றுடன் 500 மில்லி காதி சோப்புக்கரைசலைச் சேர்த்து… நன்றாகக் கலக்கி, அக்கரைசலில் இருந்து, 100 மில்லியை எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலவேளைகளில், கைத்தெளிப்பான கொண்டு, புகைபோல் தெளிக்க வேண்டும். 20, 40 மற்றும் 60-ம் நாட்களில், தக்காளியில் பூச்சிகளை விரட்ட இக்கரைசலை தெளிப்பு அவசியம்.

பூச்சிகளை விரட்ட வேம்புக் கரைசல்!

நடவு செய்த 50 முதல் 65-ம் நாளில், செடிகள் பூத்துக் குலுங்கும். இந்த வேளையில், சாறு உறிஞ்சும் பூச்சிகள், அஸ்வினி ஆகியவை தாக்குவதோடு, வாடல் நோயும் எட்டிப்பார்க்கும். இதை, விரட்ட வேம்பு, புங்கன் எண்ணெய் கரைசலைத் தெளிக்கலாம்.

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க
வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

சுக்கு மருத்துவக் குணங்கள்:-

சுக்கு மருத்துவக் குணங்கள்:-

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.