Thursday, March 9, 2017

கிராமியக் கவிதை

கிராமியக் கவிதை
+++++++++++++++++

களத்து மேட்டில் காத்திருக்கேன்
*********************************
களத்து மேட்டில் காத்திருக்கேன் கண்ணம்மா !
களச்சுப் போயிக் காத்திருக்கேன் கண்ணம்மா !
உழச்ச வேர்வ ஊத்துப்போல கண்ணம்மா !
ஊத்துதடி தொடச்சு விடு கண்ணம்மா !

பசிச்சுப் போயிக் காத்திருக்கேன் கண்ணம்மா !
பழஞ்சோறு எனக்குப் போதும் கண்ணம்மா !
உரிச்சு வச்ச வெங்காயம் கண்ணம்மா !
உடன் கடிக்கப் போதுமடி கண்ணம்மா !

விரல் கூட்டிக் கவளச்சோறு கண்ணம்மா !
விரும்பி எனக்கு ஊட்டிடடி கண்ணம்மா !
எழந்த தெம்பு எல்லாமும் கண்ணம்மா !
ஏத்தத் தண்ணி போலேறும் கண்ணம்மா !

முந்தானக் கொட பிடிச்சு கண்ணம்மா !
முழுவெயில மறச்சு நில்லு கண்ணம்மா !
கொஞ்ச நேரம் கண்ணசரக் கண்ணம்மா !
ஒம்மடியக் கடன் கொடுடி கண்ணம்மா !

களத்து மேட்டுக் காவலிலே கண்ணம்மா !
கனிஞ்ச காதல் உடன்வருமே கண்ணம்மா !
முடிச்சிடவே பல கடமை கண்ணம்மா !
முழுவாழ்வும் தொண இருடி கண்ணம்மா !

நன்றி
    - கே. கமலசரஸ்வதி

No comments:

Post a Comment