நலம் தானா?(!)
"""""""""""""""""""""""""""
நலம் தானா?
வீடு மலை காடு எல்லாம் வளம்தானா?
நிறைவாய் இருப்பது ...
மனம்? ஆறு? குளம் தானா?
நமக்கு நாமே உதவிக் கொண்டால்-
தகுதிக்கு ஏற்ப ப(உ)தவி(க் ) கொண்டால்...
நல்லவை வல்லவை சேர்ந்து கொண்டால்...
நடப்பவை யாவுமே நலம் தானா?
மனதால் இணைந்து மணப்பவர் எல்லாம்...
ஒரே குலம் தானா ?
மனிதக் குலம் தானா?
அன்பும் பண்பும் வீட்டில் இருந்தால்
அதுவே கோயில்; புனிதத்
தலம் தானா?
புரட்சிகள் ;முயற்சிகள்;
யாவையும் நலம் தானா?
திரண்ட செல்வக் கடவுள்
வேங்கடா-சலம்தானா?
நாட்டுக் காய்கறி பழங்கள்
விளை நிலம் தானா?
நித்தம் அவற்றால் விருந்து
வகைகள் பலம் தானா?
சிறியவர் பெரியவர்;
குழந்தைகள் முதியவர்;
சொந்தங்கள் பந்தங்கள்...
நலம் தானா???
வறியவர் வாழ்வினில்;
விவசாயிகள் வயல்களில்;
இளையவர் இதயத்தில்...
நிம்மதி நலம் தானா???
நலம் தரும் நல்ல உணவுகள்...??
மனம் கவர் செல்ல நினைவுகள்..?
நினைப்பவை நியாயமாய்...!!
வண்ணக் கனவுகள்..?
பழகும் விதங்கள் ?நலம் தானா??
__________________________________
No comments:
Post a Comment