Friday, March 31, 2017

கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி

கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி

கோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக தேவை இருக்கும். குறிப்பாக தர்ப்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களின் தேவை சராசரி நுகர்வைவிட அதிகளவில் இருக்கும். இக்காலங்களில் அறுவடைக்கு வரும் பழங்கள் சந்தைகளில் அதிக வருவாயைத் தரும். இதில் தர்ப்பூசணி என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும் ஏற்ற பயிர்.

தர்ப்பூசணி அதிக அளவிலான பாதுகாப்புகளை கொண்டிராத பயிர் என்பதால் விவசாயக் குடும்பத்து பெண்கள் கூட தனியாகவே இப்பயிரை விதைக்க முன் வருவார்கள்.  பிப்ரவரி மாதத்தில், இதை விதைத்தால் மே, ஜூன் மாதங்களில் அறுவடை செய்து அதிக வருவாயைப் பார்க்கலாம்.

தர்ப்பூசணியில் ஏராளமான ரகங்கள் உள்ளன. அவை நியூ ஹாம்ப்ஷைர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹ ஜயமாடோ, பெரிய குளம் 1, அர்கா, மானிக், அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்கா ஜோதி, பூசா பேதனா, அம்ருத் உள்ளிட்டவை. அதிக மகசூல் தரக் கூடிய ரகம் பெரியகுளம் 1 எனப்படும் பிகேஎம் 1 ஆகும். இதில் பழங்கள் பெரிதாகவும், அடர் பச்சை நிறம் கொண்டதாகவும், உள்ளே சதைப் பகுதி இளஞ்சிவப்பு, சிவப்பு நிறத்திலும் இருக்கும். மகசூல் ஹெக்டேருக்கு 122-135 நாள்களில் 36-38 டன் கிடைக்கும்.

 மண், தட்பவெப்பநிலை:

மணல் கலந்த நிலம் மிகவும் உகந்தது. அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரத்தன்மை, நல்ல சூரிய வெளிச்சத்துடனும் உள்ள தட்பவெப்பநிலை பயிர் செய்ய ஏற்றது. குறைந்த வெப்பநிலையில் விதைகள் முளைப்பது குறைவாக இருக்கும். காய்கள் முதிர்ச்சி அடையும் பருவத்தில் அதிக வெப்பநிலை நிலவுவது பழங்களில் இனிப்புத் தன்மையை அதிகரிக்கும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சி தடைபடும்.

 பருவம்:

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்படும் பயிர் கோடைக் காலத்தில் அறுவடை செய்யப்படும். கோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதைத் தவிர ஜூன், ஜூலை மாதங்களிலும் விதைப்பு செய்யலாம்.

 நிலம் தயாரித்தல்:

நிலத்தை 3, 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 30 டன் மக்கிய தொழு உரமிட்டு மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்களை அமைத்திட வேண்டும். இந்த வாய்க்கால்களின் உள்புறம் 1 மீட்டர் இடைவெளியில் 45 ஷ் 45 ஷ் 45 செ.மீ நீள, அகல, ஆழ அளவில் குழிகள் தோண்ட வேண்டும். இக்குழிகளில் சம அளவு மேல் மண், தொழு உரம் ஆகியவற்றுடன் ரசாயன உரங்களைக் கலந்து இட வேண்டும்.

  உரப் பாசனம்:

தர்ப்பூசணி பழத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு தழை, மணி, சாம்பல் சத்து முறையே 200:100:100 கிலோ. இந்த அளவைப் பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும்.

 விதையும், விதைப்பும்:

ஒரு ஹெக்டேருக்கு விதைக்க சுமார் 3, 4 கிலோ அளவு விதை தேவை. குழி ஒன்றுக்கு 4, 5 விதைகளை தூவி பின்னர் முளைத்து வந்தவுடன் குழிக்கு 3 செடிகள் இருக்குமாறு கலைத்து விட வேண்டும்.

  நீர் நிர்வாகம்:

பருவ மழைக் காலங்களில் மானாவாரியாகப் பயிர் செய்யலாம். கோடைக் காலத்துக்கு அறுவடை செய்யப்படும் பயிரை பாசனப் பயிராகப் பயிர் செய்யலாம். மானாவாரியில் மழை வந்தவுடன் குழிகள் தோண்டி விதைப்பு செய்ய வேண்டும். இரைவையில் விதைப்பதற்கு முன்னர் குழிகளில் நீர் ஊற்றிப் பின்னர் 7,10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் ஊற்ற வேண்டும். விதைகள் முளைத்து வந்த பின்னரே வாய்க்கால்கள் மூலம் நீர் பாய்ச்சுதல் வேண்டும். நீர் பாய்ச்சுதலை ஒரே சீரான இடைவெளியில் செய்ய வேண்டும் (சுமார் 10 நாள்களுக்கு ஒரு முறை) அதிக நாள்கள் நீர் பாய்ச்சாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக் குறைவான நிலைக்குப் போன பின்னர் திடீரென்று நீர் பாய்ச்சினால் காய்கள் வெடித்து விடும். இவ்வாறு வெடித்த காய்கள் விற்பனையில் விலை குறைந்து போக ஏதுவாகும்.

 களை கட்டுப்பாடு, பின்செய் நேர்த்தி:

விதைத்த 15, 30-ஆம் நாள்களில் களைக்கொத்து கொண்டு களை நீக்கம் செய்ய வேண்டும். விதைத்த 15-ஆம் நாள் (பயிர் 2 இலைகளுடன் இருக்கும்போது) டிபா என்ற பயிர் ஊக்கியை 25.50 பி.பி.எம் என்ற அளவில் கரைத்துத் தெளிக்க வேண்டும் (25, 50 மில்லி கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது 250 மி. கிராம், 500 மி.கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலக்க வேண்டும்) மீண்டும் ஒரு வாரம் கழித்து இதே அளவில் கலந்து ஒரு முறை தெளிக்க வேண்டும். இதற்குப் பதிலாக எத்ரல் பயிர் ஊக்கியை கீழ்க்கண்ட தருணத்தில் 4 முறை தெளிக்கலாம். (2 மி.லி. மருந்து 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து) முதல் இரண்டு இலைப் பருவம், ஒரு வாரம் கழித்து, மேலும் ஒரு வாரம் கழித்து, மீண்டும் ஒரு வாரம் கழித்து என 4 முறை தெளிக்க வேண்டும். கொடிகள் படர ஆரம்பித்தவுடன் வாய்க்கால்களிலிருந்து எடுத்து இடைப்பகுதியில் படரச் செய்ய வேண்டும். விதைத்த 30-ஆம் நாள் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதற்கு குழி ஒன்றுக்கு 13 கிராம் யூரியா இட வேண்டும்.

  ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு:

பயிர்களைத் தாக்கும் வண்டுகளைக் கட்டுப்படுத்த நனையும் செவின் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பயிர்களை சாம்பல் நோய் தாக்கினால் அதை கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தை ஒரு லிட்டர் தண்ணீரை 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். தர்ப்பூசணியை பழ ஈக்கள் தாக்கலாம். இதனைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தினை உபயோகப்படுத்தலாம்.

  அறுவடை:

பழங்கள் முற்றி பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கான அறிகுறி என்பது பழத்தை தொட்டுப் பார்த்தால் மட்டுமே தெரியும். நன்கு முற்றிப் பழுத்த பழத்தை விரலால் தட்டிப் பார்க்கும்போது ஒரு மந்தமான ஒலி உண்டாகும். பழம் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் பசுமை நிறம் மாறி மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறமடையும். பழங்களைக் கையில் எடுத்து அழுத்தம் கொடுக்கும்போது அப்பகுதி எளிதில் உடைந்து நொறுங்கும். சாதாரணமாக மலர் விரிந்து மகரந்தச் சேர்க்கை நடந்து சுமார் 30 முதல் 40 நாள்களில் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். சாதாரணமாகவே தர்ப்பூசணி ஒரு மகசூலுக்கு ஹெக்டேருக்கு 25 முதல் 30 டன்கள் வரை கிடைக்கும்.
இதுகுறித்து மேலும் அதிக விவரங்கள் தேவைப்படும் விவசாயிகள் அவர்களது வட்டாரங்களில் உள்ள தமிழக அரசின் வேளாண்மை துறையின் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பயன் பெறலாம்.

Thursday, March 30, 2017

புற்று நோய்க்கு அருமருந்தாகும் நாகதாளி..!

புற்று நோய்க்கு அருமருந்தாகும் நாகதாளி..!
.
நாகதாளி என்பது கறுமை நிறத்தில் முட்கள் மிக நுண்ணியதாகவும் 12 அடி வரை உயரமாகவும் அதன் வேரில் கறுநாகம் தலை தூக்கி நிற்பது போலும் இருக்கும். இது மிக தடினமானது, இதன் இலைகள் அல்லது தட்டுக்கள் நீள்வட்டமாக இருக்கும்.
.
அன்றே மருந்தை கண்டுபிடித்து சொன்ன நம் அகத்தியப்பெருமான் .! சிறப்பு பதிவு.!
இது திரு நடராஜன் அவர்கள் வலைப்பதில் இருந்து எடுத்த அருமையான பொக்கிஷம் .!
.
மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை.
.
இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*
*எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்வோம்
.*
*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*
*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார்.
.
ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*
*
.அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*
*இதன் பின் தான் இதற்கான மருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,
*
*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார். இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.
*
*வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
*
*விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.
*
*பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
*
*நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
*
*பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !*
*– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*
*கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான் என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்*
*
இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.*
*
நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம்.

குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.
*
*அதன் பின் இந்த உப்பை நன்றாக பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,
*
*நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.*
*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*
*இல்லை என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.*
*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) ) தான் என்றார்.*
*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.*
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள் என்றார் அவர்.*
*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*
*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார்.*
*
இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*
*
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.
*
*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம் இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை சென்றடைந்துள்ளது.
*
*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
*
*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
*
*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து என்று தெரிவிக்கிறார்.

அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில் இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.

* *முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.
*
*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*
இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் மற்றும் மூலிகை ஆராட்சியாளர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம். அதை சார்ந்த அன்பர்கள் இதை செயல்பாட்டில் கொள்ள முயல வேண்டுகிறோம்.!
.
நம் தமிழ் மொழி உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்து வந்துள்ளது என்பதற்க்கு இது மேலும் ஓர் சான்று. கிடைப்பதற்கரிய பொக்கிஷத்தை பாதுகாப்பது நம் கடமையல்லவா.?

நன்றி - சித்தர் நூல்கள்.

நாயுருவி

நாயுருவி

நாயுருவி கண்டால் வசீகரமாம் காண் – சித்தர் கூற்று.
கிராமபுறங்களில் கொல்லைக்காடுகளிலும், நகர்ப்புறங்களில் சாலையோரங்களிலும் வெகு சாதாரணமாய் தென்படும் இந்த நாயுருவி (Achyranthes aspera) ஒரு வெகுசக்தி வாய்ந்த மருத்துவ மூலிகைகச் செடியாகும்.இது ஒரு குத்துச்செடி வகையை சார்ந்தது.
எல்லா இடங்களிலும் தானே வளரும் தன்மை கொண்ட நாயுருவிச் செடியில் அரிதான மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றது. எப்போதும் போல நல்லவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லைதானே.
நீள நீளமான குச்சிகளில் கீழ்நோக்கியபடி ஒட்டவைத்த நூற்றுகணக்கான அரிசிகள்தான் இதன் விதைகள். ஏதேனும் சிறு விலங்குகள் இந்த செடியை உரசியபடி ஓடும்போதோ, மனிதர்கள் இந்த செடியை உரசியபடி கடக்கும் போதோ இந்த விதைகள் அவற்றுடன் ஒட்டிக்கொண்டு விடும். அந்த விதை நன்கு காய்ந்த பின் உதிர்ந்தும் விடும். இந்த செடியின் விதைகள் பரவுவதற்காக இயற்கை அமைத்த வழிதான் இது.
இதில் செந்நாயுருவி, கருநாயுருவி, வெண்நாயுருவி என மூன்று வகைகள் இருக்கின்றன. இந்த மூன்று வகைகளுமே மருத்துவ குணம் சார்ந்தது என்றாலும் கருநாயுருவி (“கரு”நாயுருவி) தான் கிடைத்தற்கரியது. கருநாயுருவி கஷாயத்தை கர்ப்ப காலத்தில் மூன்று வேளை கொடுத்தால் சுகப்பிரசவம் ஆகும் என்கிறது சித்தர்களின் மூலிகை ஆராய்ச்சி முடிவுகள்.

மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, பாறையில் துளையிட்டு வளரும் ஆற்றல் பெற்றது. இதனால் இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு.
இந்த செடியின் வேரை வாயினுள் சில மணி நேரங்கள் வைத்து இருந்தால் நா வன்மை பெருகுமாம். நாவுருவி என்ற இதன் உண்மையான பெயர் மருவி நாயுருவி ஆகி இருக்கலாம்..
நாயுருவியின் இலை முதல் வேர் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. மனிதனின் சிறுநீரக உறுப்புகளை சரிவர இயங்கச் செய்யும். நோய்களை நீக்கி உடலைத் தேற்றும். தேவையற்றச் சதைகளை நீக்கும். நரம்புகளை சரிவர இயங்கச் செய்யும். இதுவே இவற்றின் பொதுவான மருத்துவ குணங்கள் ஆகும்.
நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். (நாயுருவியுடன் கிராம்பு, வேம்பு, சுக்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஏல அரிசி, கருவேலப்பட்டை, இந்துப்பு போன்றவற்றைச் சேர்த்து பற்பொடியும் தயாரிக்கலாம்.)
நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கினால் கறைகள் இல்லாமல், பற்கள் பளிச்சென்ற வெண்மை நிறம் பெறும்.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி, பற்களில் உண்டாகும் கூச்சம், சொத்தை, ஈறுகளில் உண்டாகும் வலி, வீக்கம் என வாய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும், நீக்குவதுடன் பற்களை பளபளவென மின்னச் செய்யும்.
நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பற்களோடு சேர்ந்து முகம் அழகு பெறும். வசீகரம் கூடும். வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். மனசக்தி அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
முகம் பொலிவு பெற்று, பேச்சில் தெளிவு கூடும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் தன்னம்பிக்கை பெருகும். தன்னம்பிக்கை பெருக பெருக அது ஏற்படுத்தும் சக்தி அலைகள் மற்றவரை வசியம் செய்யும். அதனால் இதை ஒரு வசிய மூலிகை என்றும் கூறலாம்.
.

மாதவிடாய்க் கோளாறுகள் ,வெள்ளைப்படுதல், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், வெப்பக்கட்டிகள், தேமல், படை, சொறி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இம்மூலிகைப் பயன்படுகிறது. உடம்பில் நீர் கோர்த்தல், ஊதுகாமாலை, நீரிழிவு நோய், ஆறாத புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள், விஷக்கடி போன்றவையும் முற்றிலும் குணமடையும்.

மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, உடல் இரும்பைப் போல் உறுதியாகும். யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு, முக வசீகரம் ஆகியன உண்டாகும்.

அதுமட்டுமல்ல காய்ந்த செடிகளை எரித்து அதன் புகையை சுவாசித்தாலும் அதுவும் மருந்து. எறிந்த சாம்பலை குழைத்து பூசினாலும் மருந்து.
இந்துக்களின் பூஜை முறைகளில் ஹோமம் வளர்க்கும் முறையில் ஆல், அரசு குச்சிகளுடன் நாயுருவியும் இருப்பதை நாம் கண்டிருப்போம். ஆம். இது ஒரு தேவ மூலிகை.

ஓரிரு தொட்டிகளிலோ, காம்பவுண்ட் /வேலி ஓரத்திலோ ஓரிரு செடிகள் வளர்த்தால் போதுமானது. உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து கூண்டு அமைத்து, உரம் போட்டு எல்லாம் வளர்க்க வேண்டிய கட்டாயமில்லை.
மக்கள் நலனிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கும் இந்த அற்புத மூலிகைக்கு கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், எப்போதாவது கொஞ்சம் இயற்கை எருவும் போனால் போகிறதென்று கொடுங்கள்.

ஹோம் வளர்க்கும் ஒன்பது வகை விறகுக் குச்சிகள், அவை : (1) முருக்கு, (2) கருங்காலி, (3) நாயுருவி, (4) அரசு, (5) அத்தி, (6) மா, (7) வன்னி, (8) ஆல், (9) இத்தி என்பன.

பல் போடி செய்யும் முறை
நாயுருவி வேர் – 100 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
நெல்லிக்காய் – 50 கிராம்
தான்றிக்காய் – 50 கிராம்
ஏல அரிசி – 20 கிராம்
கிராம்பு – 50 கிராம்
சுக்கு – 50கிராம்
கருவேலப்பட்டை – 50கிராம்
இந்துப்பு – 50 கிராம்

உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதைக்கொண்டு தினமும் இரு முறை பல் துலக்கி வர பல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் பற்கள் பளபளவென மின்னும்.
இன்னொரு விந்தையான குணம் நாயுருவிக்கு உண்டு .இதை சித்தர்கள் ரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்தனர் .

நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது .எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும் .