கவிஞர் செந்தமிழ்தாசன்
நடத்துவோன்டா ஜல்லிக்கட்டு ... 🐂
பிட்டாவ பேட்டாகொண்டு
அடிக்கும்வரை ஓயமாட்டோம்
ஐல்லிக்கட்டு நடத்தாம
இனிநாங்க மாயமாட்டோம்
மாட்டுக்காக மகனக்கொன்றான்
மனுநீதி சோழனடா
மனுநீதி சோழனோட
மரபணுதான் நாங்களடா
ஆயிரம்தட போட்டாலும்
நடத்துவோன்டா ஜல்லிக்கட்டு
ஆம்பளையா நீயிருந்தா
வாடிவாசலில் மல்லுக்கட்டு
எங்கவீட்டு செல்லப்பிள்ள
எங்களோட காளையன்டா
புல்லோடு பாசத்தையும்
போட்டுத்தான் வளர்த்தோன்டா
கொம்புமுதல் வாலுவரை
கொஞ்சிகொஞ்சி ரசிப்போன்டா
அம்மாயென்று அதுபோடும்
சத்தத்தில்தான் விழிப்போன்டா
நந்திய வணங்கித்தான்
சிவனையே பாப்போன்டா
திருவிழானா எங்கவீட்டில்
தெய்வமே மாடுதான்டா
எங்கமண்ணின் வீரத்த
காங்கேயம் சொல்லுமடா
ஆப்பிரிக்க யானைக்கூட
அதுமுட்டித் தள்ளுமடா
இமயம்போல எழுந்துநிற்கும்
காங்கேயம் திமில்அழகு
எகிறிவரும் காளைகள
எதிர்க்கும்எங்க திமிர்அழகு
எங்களோட வீரத்தின்
அடையாளம் ஐல்லிக்கட்டு
எவன்அதை தடுத்தாலும்
அங்கேயே அவனமுட்டு
மக்கள்கேட்கும் சட்டத்த
கொடுக்காத நீதியெதற்கு
நிதிவாங்கி நீதீசொல்லும்
நீதிமன்றத்திற்கு மதிப்பெதற்க
தடையுடைத்து ஜல்லிக்கட்ட
தைரியமா நடத்துவோம்
அதற்காக கைதுசெய்தால்
அப்பவும்மீசை முறுக்குவோம்
என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
கவிஞர் செந்தமிழ்தாசன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Niyaz Riswan
முதுகில் திமிலை
தூக்கி நிற்கும் காளை
அழகு...
முகத்தில் மீசையை
முறுக்கி எதிர்த்து நிற்கும்
ஆம்பளை(தமிழன்) அழகு...
புலியை
முறத்தால் அடித்து
விரட்டிய தமிழச்சி
மார்பு பால் குடித்து
வளர்ந்த பரம்பரை
நாங்கள்
சிங்கத்தை
அவிர்த்து விட்டு
அசிங்கம் பட்டு நிற்க
போகிறீர்கள் நீங்கள்...
தமிழன் வீரம் பெரிது
பல நூற்றாண்டுக்கு
முன்பே உலகம் அறிந்தது...
ப்ரியமுடன்
நியாஜ் ரிஸ்வான்
,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு.,இது நம் தமிழனின் ஆன்மாவில் உரமேரிய நம்பிக்கை நாணயத்தின்் பழமையான வீர விளையாட்டு.தொன்மையானது,தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான ஏறுதழுவல்....
ஒருவன் போரிட்டு வெற்றி பெற்றால்,அதை போர்களத்தில்.,பிற ஆண்கள் காண முடியும்.
பெண்டீரும் கானும்படி,தன் வீரத்தை பறை சாட்ட வீர ஆண்மகனுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இந்த ஜல்லிக்கட்டு....
அக்காலத்தில் பெண்களை பார்வையாளர்களாய் அனுமதிக்கப்பட்ட ஒரே விளையாட்டு இதுதான்.....
காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும் அது மொத்தமாய் இதில் பிரதிபலிக்கும்,தமிழன் காதல்,மானம்,வீரம் என மூன்றிலுமே மிகைப்படுத்தப்பட்டே பழக்கப்பட்டவன் இவற்றை விட்டு விட்டால் உயிரையே மாய்த்துக் கொள்வான்.
இந்த ஜல்லிக்கட்டு ஆத்மார்த்தமாய்,ஆழமான ஆர்வமும்.,நம்பிக்கையும்,அக்கறையும்,கொண்டுள்ள ஒரு தவம்..இதை தடுப்பவர்களை தகர்த்து எரிந்து மடைதிறந்து ஜல்லிக்கட்டு நடாத்துவோம்..வீறு கொண்டு எழு தமிழா உனக்கே உரமேறிய திமிரோடு....!!.!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கொம்பு பிடித்து அடக்கும் எங்களுக்கு உங்கள் வம்பை அடக்குவது சாதாரணம்
எங்கள் காளைகளின் வால் முடியைத் தொடக்கூட தைரியம் அற்ற உங்களுக்கு எங்கள் வாள் முனை எதிர்க்கும் வீரம் புரிந்திருக்க வாய்ப்பில்லை
கூண்டில் பார்க்கும் உங்களுக்கு பெரிதாய்த்தான் தெரியும் சிங்கம்
வேடிக்கை பார்க்கும் உங்களுக்கு தெரியாது எங்கள் வீரத்தின் வரலாறு...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
/8'3
ReplyDelete