திருநீற்றுப் பச்சிலை, துளசியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். பச்சிலை என்று குறிப்பிடப்படும் இத்தாவரத்தின் இலை, தண்டு, பூ என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மணமும், மருத்துவக் குணமும் கொண்டவை.
பொதுவாக இவ்வகை இனத்தாவரங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளின் வீணான இடங்கள், சாலையோரங்களில் தானாகவே வளரும் தன்மை கொண்டவை.
நஞ்சினை முறிக்க மாற்று மருந்தாகப் பயன்படுகிறது. கிராமப்புறங்களில் கை வைத்தியத்திற்கு இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது. ஜுரத்தைக் குறைத்து வியர்க்கச் செய்யும் பூச்சிகளை அகற்றும் கிருமி நாசினியாகும். நோயை ஆற்றும். கபத்தை வெளியேற்றும்.
புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இதன் இலைசாறைத் தடவலாம். அஜீரணத்தைப் போக்கும். முத்திரக்கல்லை நீக்கும். படர்தாமரை நோயைக் குணப்படுத்தும். இதிலிருந்து எடுக்கப்படும் தைலம் சரும நோய்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
பச்சிலையை புண், பரு, பேன் இவைகளைப் போக்க தேய்த்துக் குளிக்கலாம். இதன் மணத்திற்காக எண்ணெய் முறைகளில் சேர்ப்பதுண்டு. பச்சிலை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி, சடாமாஞ்சில், வாய்விடங்கம், கசகசா, கார்போக அரிசி, சந்தனம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு இவைகளைப் பொடித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் குழைத்துப் பூசி தலை முழுகினாலும், பொடியைத் தனியாக தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு, சொறி, கற்றாழை நாற்றம் போகும். உடல் சூடு தணியும்.
இலைச்சாறு பருக்கள், வடுக்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கிறது. இதன் சாறுடன் வசம்பு சேர்த்து, அரைத்து சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் குணம் தெரியும். புரையோடி சீழ் வைத்த பருக்களுக்கும், விஷப் பருக்களுக்கும் மூன்று வேளை தடவ பரு காய்ந்து உதிர்ந்து விடும்.
கண்களுக்கு இலையின் சாறு தடவ கண்கட்டி போன்ற கண் நோய்கள் குணமாகும். விதைகள் குளிர் பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்த பச்சிலையின் சாறு எடுத்து சுடு நீரில் கலந்து கொடுக்கலாம், கஷாயம் செய்தும் கொடுக்கலாம். முகம் போன்ற உடல் உறுப்புகளில் விஷத் தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள்.
இந்த விஷப் பருக்களைத் தெரியாமலோ நகத்தாள் கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தையே கூட ஏற்படுத்தி விடும். இத்தகைய விஷப்பருக்கள் தோன்றினால் யாரும் கவலைபடத் தேவையில்லை. திருநீற்றுப்பச்சை இலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேளை தடவினால் போதும் பரு காய்ந்து கொட்டிவிடும்.
திறுநீற்றுப் பச்சையின் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி வியர்வைகளை அகற்றும் வேலைகளையும் செய்கிறது. இதன் இலை உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து சிறுநீரைப்பெருக்கும் தன்மையை கொண்டது. சித்த வைத்தியத்தில் லேகியம், தைலம் தயாரிப்பதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். காது வலி, காதில் சிழ் வடிதல் போன்ற நோய்களுக்கு இதன் இலையை பறித்து சாறு பிழந்து காதுகளில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி, சீழ் வடிதல் குணமாகும்.
தேள் கடித்துவிட்டது என்றால் திருநீற்றுபச்சையின் சாற்றை கடிவாயில் பேட்டால் வலி குணமாகும். ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும்.
இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும். சில சமயம் பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, இந்தச் சாற்றையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.
No comments:
Post a Comment