மெரினாவின் உண்மைகள்.....!!
காட்சி 1 : இந்தாப்பா டீ சாப்பிடு..
"எவளோண்ணா"
காசு வேணாப்பா, உங்க போராட்டத்தில என் பங்கு
(சைக்கிளில் டீ விற்கும் அன்றாடங்காட்சி )
காட்சி 2 :
(இரவு) இந்தாங்க சாப்பிடுங்க..
நாங்க காலையில சாப்பிட்டோம்மா அந்த பக்கம் காலையில இருந்து சாப்பிடாதவங்க இருக்காங்க அங்க கொடு...
(ஒருவேளை சாப்பிட்டால் போதும் சாப்பிட கிடைக்காதவர் சாப்பிடட்டும் என்கிற பெருந்தன்மை)
காட்சி 3:
டேய் இதில் மூனு பேருக்கு சாப்பாடு இருக்கு
அம்மா, அப்பிடியே நீயே ஊட்டிவிட்ருமா
(3 ஆள் சாப்பாடு 4 - 4 வாயாக 8 பேருக்கு ஊட்டப்படுகிறது)
காட்சி 4 :
(ஒரு டீ கேன் சப்ளையரிடம்) அண்ணா நாளைக்கி ஒரு கேன் ஃபுல்லா பால் மட்டும் கொண்டுவாண்ணா இந்தா காசு
சரிப்பா...குழந்தைகளுக்கு தான கேக்குற...காசு வேணாப்பா...
(இல்லண்ணா நேத்துலர்ந்து மூனு கேன் இலவசமாக கொடுத்துட்டு இருக்க நீயும் எங்க போவ ஃப்ரீயா தர இந்தா வாங்கிக்கண்ணா)
இந்த கண்கலங்க வைக்கும் காட்சிகள் மெரினாவின் உண்மை சம்பவங்களாகும்.
வருமானமில்லாத இளைஞர்களும் அன்றாடங்காட்சிகளும் தத்தமது சக்திக்கு ஏற்ப சொந்த பணத்தை செலவு செய்கிறார்கள்.
பாப்கார்ன் விற்கும் கிழவர் அனைத்தையும் வாரிக்கொடுக்கிறார். முறுக்கு விற்கும் கிழவி டப்பாவையே தூக்கி கொடுக்கிறார், இளநீர் விற்பவர் இலவசமாக இளநீரை வெட்டி கொடுக்கிறார், ஏழை வீட்டு பீடி சுற்றும் முஸ்லிம் பெண்கள் குழுவாக இணைந்து அவர்கள் வீட்டில் உள்ளதை வைத்து உணவு சமைத்து மீன்பாடி வண்டிகளில் வந்து விநியோகிக்கிறார்கள்.
மெரினாவின் உண்மைகள் கண்களை கலங்க செய்கிறது.
No comments:
Post a Comment