Wednesday, April 26, 2017

மனிதர்களான நமக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மருந்து

மிகவும் சாதாரணமாக காணப்படும் இந்த வகை தாவரங்கள் மனிதர்களான நமக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மருந்து தான், பொதுவாக நாம், நாம் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, யானை, குதிரை, ஒட்டகம், மற்றும் சில வளர்ப்பு பிராணிகளுக்கு நோவென்று ஒன்று வந்தால் மருத்துவர் வெட்னரி டாக்டர் என்று செல்லுவோம், ஆனால் இந்த மருத்துவம் செல்லும் உயிரினங்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே மற்ற 97 சதவீத உயிர்கள் என்ன செய்யும் அதற்கான மருதுக்கடை தான் இந்த தாவரங்கள்,

தரைப்பசலை.

1. மூலிகையின் பெயர் :- கொடிப்பசலை.

2. தாவரப்பெயர் :- PORTULACA QUADRIFIDA.

3. தாவரக் குடும்பம் :- PORTULACACEAE.

4. பயன் தரும் பாகங்கள் :- இலைகள்.

5. வளரியல்பு :- கொடிப்பசலை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் அமரிக்கா, பின் ஆப்பிரிகாவுக்கும் இந்தியாவுக்கும் பரவிற்று. இதை வீட்டுப்பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் கிராமங்களில் வளர்க்கிறார்கள்.

வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை வழங்குகின்றது. கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை அன்னை தன்னுடைய மிக விரிவான ஜீவாதாரமான ரசவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர். பசலையில் செடிப்பசலை என்ற இனம் உண்டு. இது குத்துச் செடியினம். இது இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன்கீரை என்றும் அழைப்பர்.

இதன் இலைகள் சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். மற்றொன்று தரைப்பசலை என்பது. இது தரையில் படர்ந்து வளரும். இலைகள் சிவப்பாகவும் பசுமையாகவும் இருக்கும். குணம் எல்லாம் ஒன்று தான். கொடிப்பசலையின் இலைகள் பச்சையாகவும், வட்டமாக நீண்டு இருக்கும். கொடி 90 அடிக்கு மேல் படரும். படத்தில் உள்ள கொடிகள் என் மாடிவீடு வரை படர்ந்துள்ளது. பல வருடம் இருக்கும். பழங்கள் கருநீலத்தில் இருக்கும். கொடியை வெட்டி வைத்தால் வளரும். விதை மூலமும் வளரும்.

6. மருத்துவப்பயன்கள் :- பசலைக்கீரை இலையாக அமைந்த கறியாகும்.

அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது, இனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது, மருந்தாகும் மதிப்பு உள்ளது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன, சுண்ணாம்புச்சத்து உள்ளது, இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது.

புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொத்து நோயிக்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது. பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு.

ஆனால் வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும். இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன. ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது. பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிகின்றது, குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது, மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.

இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம். பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம். இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் செர்த்துக் கொள்ளலாம். இது நல்ல பசியைத் தூண்டிவிடுகின்றது. பருப்புகளுடன் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்றன.

பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது. நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.

இலைகளை (1 லிருந்து 10 வரை)க் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது, சிறுநீரைப் பெருக்குகின்றது. உட்கொள்ளும் அளவு 1 அல்லது 2 அவுன்சு.வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை ஏராளமாக உண்ணவேண்டும், அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது, சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்குப் பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால் மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!

Tuesday, April 25, 2017

35 ஏக்கரில் ஆண்டுக்கு 17 லட்சம் ! ஒப்பில் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்...

35 ஏக்கரில் ஆண்டுக்கு 17 லட்சம் ! ஒப்பில் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்...

ஒரே ஒரு பயிரை மட்டும் சாகுபடி செய்யாமல், பலவிதமான பயிர்களைக் கலந்து சாகுபடி செய்பவர்களும்... விவசாயத்தோடு கால்நடைகளையும் வளர்த்து வளர்பவர்களும், பெரும்பாலும் நஷ்டத்தை சந்திப்பதில்லை. இதைத்தான் விவசாய வல்லுநர்கள் பலரும் நெடுங்காலமாக சொல்லி வருகிறார்கள். இதைச் சரியாகக் கடைபிடித்து வெற்றிகரமாக விவசாயம் செய்பவர்கள் பலர் உண்டு என்பதற்கு உதாரணமாக நிற்கிறார்... திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இனியவன்!

படித்தது பார்மசி... பார்ப்பது பண்ணையம் !

தென்னை, வாழை, கரும்பு... என பசுமையாக, கலந்து கட்டி இருக்கும் தன்னுடைய தோட்டத்தில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இனியவன், நம்மைக் கண்டதும், சற்றே இளைப்பாற வந்தமர்ந்தார்.

''வேலையாட்கள் கிடைக்காம, முப்பது வருஷத்துக்கு முன்னயே, 21 ஏக்கர்ல தென்னையை நட்டு விட்டுட்டார் எங்கப்பா. டி-பார்ம் முடிச்சுட்டு, அப்பா வெச்சுருந்த ரைஸ் மில் வேலையில நான் தீவிரமாயிட்டேன். கூடவே விவசாயமும். ஆரம்பத்துல... ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு தான்  பயன்படுத்தினேன். செலவுதான் அதிகமா இருந்ததே தவிர, பெருசா வருமானம் இல்லை. இதுக்குத் தீர்வைத் தேடி அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போதான், நாலு வருஷத்துக்கு முன்னாடி 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுக்கப்பறம்தான் ஒரு நம்பிக்கை கிடைச்சுது. இயற்கை வழி விவசாயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த இனியவன், தொடர்ந்தார்.

வண்டிக்கு காங்கேயம்... உரத்துக்கு உம்பளாச்சேரி !

''ஆரம்பத்துல இருந்தே கறவை மாடுகள வெச்சுருந்தோம். பசுமை விகடன் மூலமா, 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறைகளைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, நம்ம நாட்டு இனமான காங்கேயம் மாடுகளையும், உம்பளாச்சேரி கிடேரிக் கன்றுகளையும் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சுருக்கேன். காங்கேயம் மாடுகளை வண்டியில பூட்டி... தேங்காய் ஏத்துறது, நெல்லை ஏத்துறது மாதிரியான வேலைகளுக்குப் பயன்படுத்திட்டுருக்கேன். மாடுகள் மூலமா கிடைக்கிற கழிவுகளை, வயலுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்திக்கிறேன். இதெல்லாம் போக, மாமா எழில்மாறனோட சேர்ந்து, சண்டைக்கோழி வளர்ப்பும் தனியா நடக்குது. ஆடு வளர்ப்புலயும் இறங்கியிருக்கேன்.

ஏற்கெனவே இருக்கற 21 ஏக்கர் தென்னையில, 10 ஏக்கர்ல மட்டும் ஊடுபயிரா வாழை இருக்கு. இதைத் தவிர, தனியா 3 ஏக்கர்ல வாழை, 2 ஏக்கர்ல கரும்பு, 5 ஏக்கர்ல மரவள்ளி, 2 ஏக்கர்ல தீவனப்புல் இருக்கு. ரெண்டு ஏக்கர்ல மாட்டுக் கொட்டகை, ஆட்டுப் பண்ணை, ரைஸ் மில் இருக்கு. மொத்தம் 35 ஏக்கர். இதுல 10 ஏக்கர் குத்தகை நிலம். குத்தகை நிலம்கிறதால சிலகாரணத்துக்காக கரும்புக்கும், மரவள்ளிக்கும் ரசாயனம் போட்டுத்தான் விவசாயம் செய்றேன். மத்தபடி என்னோட தோட்டத்துல முழு இயற்கை முறைதான்.

மரத்துக்கு 80 முதல் 100 காய்கள் !

இது கரிசல் மண் பூமி. 30 அடியிலேயே தண்ணியும் இருக்கு. அதனால, எல்லா சாகுபடியும் சாத்தியமாகுது. 21 ஏக்கர்ல மொத்தம் 2 ஆயிரத்து 200 தென்னை மரம் இருக்குது. எல்லாமே, 25 வயசுல இருந்து 35 வயசுள்ள மரங்கள். அதுகளைப் பராமரிக்கறது மட்டும்தான் வேலை. ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி மாசத்துல மழைக்கு முன்ன... ஒவ்வொரு மரத்தில இருந்தும் இரண்டு அடி இடைவெளியில ஒண்ணரை அடி ஆரத்துல, கால் வட்டம் எடுத்து, 25 கிலோ எரு வெச்சுத் தண்ணி கட்டுவோம். வேற பராமரிப்பே கிடையாது.

ஒவ்வொரு மரத்துலயும் வருஷத்துக்கு எண்பதுல இருந்து நூறு காய்கள் வரை கிடைக்குது. ஒரு மரத்தை 125 ரூபாய்னு குத்தைகைக்கு விட்டிருக்கிறேன். அது மூலமா, 2 ஆயிரத்து 200 மரத்துக்கும் சேத்து வருஷத்துக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. அதில் பராமரிப்புச் செலவு 75 ஆயிரம் ரூபாய் போக, 2 லட்சம் ரூபாய் லாபம்'’ என்ற இனியவன் வாழை சாகுபடி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

வாழை இலையிலும் வருமானம் !

''தென்னைக்கு இடையில கற்பூரவல்லி வாழைய நடவு செஞ்சுருக்கேன். 13 ஏக்கர்ல மொத்தம் வருஷத்துக்கு 8 ஆயிரம் தார் கிடைக்குது. ஒரு தார், 100 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா, 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே... 8 லட்ச ரூபாய் கிடைக்கும். இதில் 3 லட்சம் செலவு போக, 5 லட்ச ரூபாய் லாபம்.  வருஷம் முழுக்க இலையையும் விக்கலாம். அது மூலமா, வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்குது.

பாலில் மாதம் 26 ஆயிரம் !

இப்போ, 24 கறவை மாடுக இருக்கு. இதுல எப்பவும் 10 மாடுகள் கறவையில இருந்துக்கிட்டே இருக்கும். தினமும் சராசரியா 40 லிட்டர் பால் கிடைக்குது. லிட்டர் 22 ரூபாய்னு பால் மூலமா தினமும் 880 ரூபாய் கிடைக்குது. மாசம் 26 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்குது. செலவு போக, 16 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்றவரைத் தொடர்ந்து, ஆட்டுப் பண்ணை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், மாமா எழில்மாறன்.

ஆண்டுக்கு 2,40,000 ரூபாய் !

''போன வருஷம்தான் ஜமுனாபாரி, போயர் கலப்பு, நாட்டு ரக ஆடுகள்னு மொத்தம் 30 ஆடுகளோட பண்ணை ஆரம்பிச்சோம். கொட்டகை, தீவனப் புல் உற்பத்தி, ஆடுகள்னு இதுவரைக்கும் 5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கோம். ஒரு வருஷத்துக்குள்ளாற 65 ஆடுகளாப் பெருகியிருக்கு. இதுவரைக்கும் ஆடுகளை விற்பனை செய்யல. இனிதான் ஆரம்பிக்கணும்.

30 தாய் ஆடுகள் மூலமா, வருஷத்துக்கு 90 குட்டிகளுக்கு குறையாம கிடைக்கும். குட்டிகளை ஆறு மாசம் வளர்த்து வித்தா, ஒரு குட்டி 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். சராசரியா வருஷத்துக்கு 80 குட்டிகளை விக்கிறதா வெச்சுக்கிட்டாலும்... வருஷத்துக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவனம், மருந்து, பராமரிப்புனு 80 ஆயிரம் ரூபாய் செலவுபோக, 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்னு எதிர்பாக்குறோம்'' என்றார், எழில்மாறன்.

நிறைவாகப் பேசிய இனியவன், ''சண்டைக்கோழியில் 40 பெட்டையும், 3 சேவலும் இருக்கு. இதுக மூலமா, வருஷத்துக்கு 1,600 முட்டைகள் கிடைக்கும். இந்த முட்டைக்கு மவுசு ஜாஸ்திங்கறதால... ஒரு முட்டை 20 ரூபாய்னு விலைபோகும். இப்படி 1,000 முட்டைகளை வித்துடுவேன். மீதியை இன்குபேட்டர்ல வெச்சு பொரிக்க வைக்கறதுல, எப்படியும் 500 குஞ்சுகள் கிடைச்சுடும். இதை ஒரு ஜோடி 1,000 ரூபாய்னு விக்கிறோம். முட்டை, குஞ்சு விற்பனை மூலமா மொத்தம் வருஷத்துக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. பராமரிப்பு, தீவனச் செலவு போக... எப்படியும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.

2 ஏக்கர்ல ஒரு வருஷத்துக்கு கிடைக்கிற 100 டன் கரும்பு மூலமா 2 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல 80 ஆயிரம் ரூபாய் செலவு போக... 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லாபம். 5 ஏக்கர்ல வருஷத்துக்கு 50 டன் அளவுக்கு மரவள்ளி கிடைக்குது. டன் 3 ஆயிரம் ரூபாய்னு விக்கிறதுல, மரவள்ளி மூலமா வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம். செலவு போக 1 லட்ச ரூபாய் லாபம். எல்லாம் சேத்து 35 ஏக்கர்ல, பத்து ஏக்கருக்கான குத்தகைத் தொகை, செலவுகள் போக, வருஷத்துக்கு 17 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்குது'' என்றார், சந்தோஷமாக.

உற்சாக ஊடுபயிர்... வாழை!
தென்னைக்கு இடையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்ய இனியவன் பயன்படுத்தும் முறைகள் இவைதான்-

''தென்னைக்கு ஊடுபயிராக சாகுபடி செய்ய கற்பூரவல்லி ரக வாழைதான் ஏற்றது. நிலத்தை நன்றாக கொக்கிக் கலப்பை மூலம் குறுக்கு-நெடுக்காக 4 சால் உழவு செய்து, ஏக்கருக்கு நான்கு டிராக்டர் எருவைக் கொட்டி கலைத்துவிட வேண்டும். பிறகு, இரண்டு சால் ரோட்டாவேட்டர் உழவு செய்து, 9 அடிக்கு 9 அடி இடைவெளி கொடுத்து... ஒரு அடி நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அவற்றை நான்கு நாட்கள் ஆறப் போட்டு... தரமான இரண்டு மாத வயதுள்ள வாழைக் கன்றுகளை அரை அடி ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 600 முதல் 650 வாழைக் கன்றுகளை நடவு செய்யலாம். விருப்பம் இருந்தால் வாழைக்கும், தென்னைக்கும் இடையில் தீவனச்சோளத்தை நடவு செய்து கொள்ளலாம். வாழை நடவு செய்த அன்று உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து, மண் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

மாதம் ஒரு முறை வீதம், 6 மாதங்கள் வரை களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் நிழல்கட்டிக் கொள்ளும். மூன்றாவது மாதம் களை எடுத்தவுடன் மரத்துக்கு ஒரு கூடை (25 கிலோ) வீதம் எரு வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாழை மரத்தில் இருந்து ஒரு அடி இடைவெளி கொடுத்து, ஒரு அடி நீளம், அகலம், ஆழம் இருக்குமாறு குழி எடுத்து... அதில், மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் ஜீவாமிர்தக் கரைசலை ஊற்ற வேண்டும்.

தார் தள்ளிய பிறகு முட்டு மரம் கட்ட வேண்டும். முதல் ஆண்டு 15 மாதங்கள் கழித்து, வாழை அறுவடை செய்யலாம். இரண்டாம் ஆண்டில் 12 முதல் 13 மாதங்களில் அறுவடை செய்யலாம். மூன்றாம் ஆண்டிலிருந்து 10 மாதங்களில் அறுவடை செய்யலாம்.'

தொடர்புக்கு :
இனியவன்,
செல்போன்: 94872-63606.
எழில்மாறன்,
செல்போன்: 89034-42489.

Friday, April 21, 2017

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் பற்றிய தகவல் !!..

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் பற்றிய தகவல் !!..

1847 ஆம் ஆண்டு மார்ச் 3ந்தேதி ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் நகரில் பிறந்தார் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். சிறுவயதிலிருந்தே கிரஹாம் பெல் கல்வியில் அதிக ஆர்வம் காட்டினார். கல்வியை முடித்தபிறகு அவர் காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் கற்பிப்பதில் அதிக கவணம் செலுத்தினார். 1870ல் கனடாவுக்குச் சென்ற பெல் அங்கும் காது கேளாதோருக்கும், பேச முடியாதோருக்கும் கற்பித்தார். பின்னர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த பெல் அங்கு காது கேளாதோருக்காக சிறப்புப்பள்ளி ஒன்றை நிறுவினார். 1873ல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் பெல்லுக்கு பேராசிரியர் தகுதி கிடைத்தது. அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார். காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார். தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார். பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர். அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன. 1876 ஆம் ஆண்டு மார்ச் 10ந்தேதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார். திடிரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது. வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார். பெல்லின் கனவு நனவானது.

அதே ஆண்டு பெலஃடால்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பை காட்சிக்கு வைத்திருந்தார் பெல். பெரும்பாலோனோர் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரேசிலின் மன்னர் டான்.பெண்ட்ரோ கருவியை காதில் வைத்து சோதித்தார். மறுமுனையில் பெல் “To be or not To be" என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளை வாசித்தார். அதனை தெளிவாக கேட்டு அதிசயித்த மன்னர் "My God its Beats" என்று நம்ப முடியாமல் கூறினார். அதன்பிறகு அந்த கண்காட்சியில் பெல்லின் கண்டுபிடிப்பு பலரின் கவணத்தை ஈர்த்தது. அதே காலகட்டத்தில் வேறு சிலரும் தாங்கள்தான் தொலைபேசியை கண்டுபிடித்ததாக கூறிக்கொண்டனர். அதனால் பெல் பலமுறை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஒவ்வொரு வழக்கிலும் பெல்லுக்கே வெற்றி கிடைத்தது. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் என்பது உறுதிபடுத்தப்பட்டது.

அதன்பின்னர் பெல் வேறு சில கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினார். ஆனால் தொலைபேசிதான் அவரது பெயர் சொல்லும் கண்டுபிடிப்பாக இருந்தது. 1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ந்தேதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார். அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை மிகச் சிறந்த மனிதராக வருணிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். உதவி தேவைப்பட்டோருக்கு எப்போதுமே மறுக்காமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். காது கேளாதோர் மற்றும் பேச முடியாதோர் நலனில் அவர் அதிக அக்கறைக் காட்டினார். இன்னும் ஒரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் பெல் நேபல் ஹபர்ட் என்ற காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். தொலைபேசியின் தந்தை கிரஹாம் பெல் இறந்தபோது வட அமெரிக்கா முழுவதும் அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினர். பெல்லின் இறுதிச் சடங்கின்போது வட அமெரிக்காவில் இருந்த அனைத்து தொலைபேசிகளையும் சில நிமிடங்களுக்கு பயன்படுத்தாமல் தங்கள் மரியாதையைச் செலுத்தினர் அமெரிக்கர்கள்.

தொலைபேசியை நமக்கு தந்ததன் மூலம் உலகை ஒரு குக்கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லையேச் சேரும். உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் தொலைபேசிக்கும் நிச்சயம் இடம் உண்டு. உடல் குறை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பெல்லின் உயரிய எண்ணமே அந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்த அவருக்கு உதவியது. உயரிய எண்ணங்கள் நம்மை உயர்த்தும் என்பதும் அந்த உயர்வால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் நம் காதுகளில் சொல்லும் செய்தியாக இருக்கும்...